மோதிரக் கையால் குட்டுப்பட்டு கதாநாயகியாக அறிமுகமாகும் மகேஷ்பாபுவின் சகோதரர் மகள் | ‛தி ராஜா சாப்' பட சம்பள பாக்கி விவகாரம் ; தயாரிப்பாளர் விளக்கம் | தொடர்ந்து ஆர்வத்தை தூண்டும் மம்முட்டியின் ‛கலம்காவல்' பட போஸ்டர்கள் | டாக்சிக் படத்தில் இணைந்த ருக்மணி வசந்த் | அர்ஜூன் தாஸிற்கு ஜோடியான ஐஸ்வர்ய லட்சுமி | வடிவேலு - பஹத்பாசிலின் ‛மாரீசன்' ஆகஸ்ட் 22ல் ஓடிடியில் வெளியாகிறது! | இது ஆரம்பம்தான்: கலக்கலான புகைப்படங்களை வெளியிட்ட ஆர்த்தி ரவி! | எனக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளது! ஓப்பனாக பேசிய சம்யுக்தா | என்னது, தீபாவளிக்கு இந்த படங்கள் மட்டுமே ரிலீஸா? | ஆக் ஷனுக்கு மாறும் ஹீரோயின்கள் |
எழில் இயக்கிய 'வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன்' படத்தில் ரோபோ சங்கர், சூரி, ரவிமரியா கூட்டணியில் உருவான 'அன்னிக்கு காலையில 6 மணி இருக்கும். கோழி கொக்கரக்கோ'னு கூவியது என்ற காமெடி வெகுபிரபலம். படம் வெளியாகி, 9 ஆண்டுகள் கடந்த நிலையிலும் அந்த காமெடி பேசப்படுகிறது. பலரால் சிரிக்கப்படுகிறது. அந்த காமெடியை மையமாக வைத்து பல மீம்ஸ், ட்ரோல் வந்துவிட்டன.
அந்த காமெடி குறித்து பேசியுள்ள இயக்குனர் ஆர்.கே.செல்வமணி 'பெப்சி, தயாரிப்பாளர் சங்கம் உள்ளிட்ட பல விவகாரங்களால் எனக்கு ஏகப்பட்ட டென்ஷன். அந்த மனநிலையில் வீட்டுக்கு போவேன். என் முகத்தை பார்த்துவிட்டு வீட்டில் உள்ளவர்கள் தள்ளிப்போய்விடுவார்கள். ஆனால், நானே, என் மனநிலையை மாற்ற இந்த காமெடியை பார்த்து ரசிப்பேன். என்னை அறியாமல் சிரித்து விடுவேன். மனம் லேசாகிவிடும். உண்மையில் ஒரு படத்தில் காமெடி எடுப்பதுதான் கஷ்டம். நான் காமெடி சீன் எடுக்கும்போது அதில் நடிப்பவர்கள் ஆளாளுக்கு சொந்த வசனங்களை அடுக்குவார்கள். அவர்களுக்குள் போட்டி வரும். எனக்கு எப்படி முடிப்பது என்று தெரியாது. எடிட்டரும் கஷ்டப்படுவார்கள். ஆகவே, மற்ற சீன்களை விட காமெடி சீன் எடுப்பதுதான் எனக்கும், மற்ற இயக்குனர்களுக்கும் கஷ்டம்'' என்றார்.