ரஜினி படத்தை தயாரிக்கும் கமல்: சுந்தர் சி இயக்குகிறார் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | 'பராசக்தி' படம் என் மீதான கவர்ச்சி பிம்பத்தை மாற்றும்! -ஸ்ரீ லீலா நம்பிக்கை | ஸ்ரீகாந்த், ஷ்யாம் நடிப்பில் தி ட்ரெய்னர் | 'லட்சுமிகாந்தன் கொலை வழக்கு' படப்பிடிப்பு தொடங்கியது | வெப் தொடரான கார்கில் போர் | ஹாலிவுட் நடிகை டயான் லாட் காலமானார் | இயக்குனராக புதிய பிறப்பு கொடுத்தவர் நாகார்ஜுனா : ராம்கோபால் வர்மா நெகிழ்ச்சி | என்னுடைய தொடர் வெற்றிக்கு இதுதான் காரணம்: விஷ்ணு விஷால் | மணிரத்னம் படத்தில் நடிப்பது பெரிய ஆசீர்வாதம்: பிரியாமணி | கேரள அரசு விருது குழுவின் தலைமையை கடுமையாக விமர்சித்த மாளிகைப்புரம் சிறுமி |

பழம்பெரும் தெலுங்கு இயக்குனர் விஜயேந்திர பிரசாத். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தை. அர்த்தங்கி, ஸ்ரீகிருஷ்ணா, ஸ்ரீவள்ளி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். ஏகப்பட்ட தெலுங்கு படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.
மகன் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் கதையை எழுதியது இவர் தான். இதுதவிர ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தலைவி, ஜான்சி ராணியின் வாழ்க்கை கதையான மணிகர்னிகாவுக்கும், இவர்தான கதை எழுதியுள்ளார்.
70 வயதை தாண்டிய விஜயேந்திர பிரசாத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். சமீப காலத்தில் தன்னோடு பழகியவர்களையும் பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.