சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் | பாலகிருஷ்ணாவின் 'அகண்டா 2' தள்ளிப் போனது ஏன் ? | 100 கோடி வசூல் கடந்த தனுஷின் 'தேரே இஷ்க் மெய்ன்' |

பழம்பெரும் தெலுங்கு இயக்குனர் விஜயேந்திர பிரசாத். இயக்குனர் எஸ்.எஸ்.ராஜமவுலியின் தந்தை. அர்த்தங்கி, ஸ்ரீகிருஷ்ணா, ஸ்ரீவள்ளி உள்ளிட்ட படங்களை இயக்கியவர். ஏகப்பட்ட தெலுங்கு படங்களுக்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார்.
மகன் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தின் கதையை எழுதியது இவர் தான். இதுதவிர ஜெயலலிதாவின் வாழ்க்கை கதையான தலைவி, ஜான்சி ராணியின் வாழ்க்கை கதையான மணிகர்னிகாவுக்கும், இவர்தான கதை எழுதியுள்ளார்.
70 வயதை தாண்டிய விஜயேந்திர பிரசாத்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதனால் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார். சமீப காலத்தில் தன்னோடு பழகியவர்களையும் பரிசோதனை செய்து கொள்ளும்படி அவர் கேட்டுக் கொண்டிருக்கிறார்.




