எங்கிருந்து வந்தேனோ அங்கேயே தான் இருக்கிறேன் : இளையராஜா பேட்டி | விவாகரத்து செய்திகளுக்கு மவுனி ராய் கொடுத்த விளக்கம் | ஜூன் 19ல் திரைக்கு வரும் ‛மா இண்டி பங்காரம்' | மே 28ல் அர்ஜுனின் பிளாஸ்ட் ரிலீஸ் | கேமராவுக்கு பின்னால் எனக்கு நடிக்க தெரியவில்லை : மீனாட்சி சவுத்ரி | 'ஜனநாயகன்' போல் பைரசியில் 'கருப்பு'?: அச்சத்தில் தயாரிப்பாளர்கள் | பரிதாபம் : ஜெயிலர் 2 படப்பிடிப்பில் ஒருவர் பலி | இளையராஜா குடும்பத்துடன் 50 ஆண்டுகளாக நட்பு தொடர்கிறது: மறைந்த பஞ்சு அருணாசலம் மகன் சுப்பு பஞ்சு பேட்டி | கருப்பு : அனைத்து பகல் காட்சிகளும் ரத்து | திருவண்ணாமலையில் கிரிவலம் வந்த நடிகை அஞ்சலி |

4 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்த படம் மாயவன். திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் சி.வி.குமார் தயாரித்து, இயக்கி இருந்தார். சந்தீப் கிஷன், லாவண்யா திரிபாதி, ஜாக்கி ஷெராப், டேனியல் பாலாஜி, மைம்கோபி, பகவதி பெருமாள் உள்பட பலர் நடித்திருந்தார்கள். ஜிப்ரான் இசை அமைத்திருந்தார், கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருந்தார்.
தடயமே இல்லாமல் அடுத்தடுத்து கொலை செய்யும் ஒரு சைக்கோ கில்லரை தேடி கண்டுபிடிக்கும் ஒரு இளம் போலீஸ் அதிகாரியின் கதை. தற்போது இதன் இரண்டாம் பாகம் மாயவன் ரீலோடட் என்ற பெயரில் தயாராக இருக்கிறது. இதையும் சி.வி.குமாரே தயாரித்து, இயக்குகிறார்.
"மாயவனை மீண்டும் உருவாக்குவதில் மகிழ்ச்சி அடைகிறோம். மாயவன் ரீலோடட் என்ற பெயரில் மாயவனின் சீக்குவல் தயாராகிறது. ரசிகர்களின் நிபந்தனையற்ற ஆதரவும், பாராட்டுமே இதற்கு காரணம். படம் பற்றிய முழு தகவல்களும் ஏப்ரல் 14ந் தேதி அன்று வெளியிடப்படும்". என்று தயாரிப்பு நிறுவனத்தின் செய்தி குறிப்பு தெரிவிக்கிறது.