பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

கொலை கொலயாக முந்திரிக்கா, வல்லமை தாராயோ, மூணே மூணு வார்த்தை படங்களை இயக்கிய மதுமிதா அடுத்து இயக்கிய படம் கேடி என்கிற கருப்புதுரை. வீட்டை விட்டு துரத்தப்பட்ட ஒரு முதியவரின் வாழ்க்கையை அர்த்தப்படுத்தும் ஒரு சிறுவனின் கதை.
இந்த படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. ஆனால் நிறைய விருதுகள் எதிர்பார்தேன். இது ஏமாற்றம் அளிக்கிறது என்று மதுமிதா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டரில், ‛‛கேடி என்கிற கருப்புதுரையின் பயணம் இனிமையானது. அன்புக்கும் அங்கீகாரத்திற்கும் நன்றி. தேசிய விருதுகளில் இன்னும் கூடுதலான விருதுகளை பெறாததில் எங்களுக்கு வருத்தம் இல்லை என்று சொன்னால் அது அப்பட்டமான பொய். ஏனென்றால் எல்லா அம்மாக்களுக்கும் அவர்கள் குழந்தைகள் தகுதியானவர்கள் தான்'' என்று எழுதியிருக்கிறார்.