அமிதாப் பச்சனுக்கு அடுத்து எனக்கு தான் : கங்கனா பெருமிதம் | ‛டிராவல் ஏஜென்ட்' படத்தை துவக்கி வைத்து ஹீரோவை அறிமுகம் செய்த தர்மேந்திரா | எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபலம் | நடிகைகளின் பாராட்டு மழையில் மஞ்சும்மேல் பாய்ஸ் | குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் சலசலப்பு : வெளியேறிய நாஞ்சில் விஜயன் | ஜப்பானுக்கு குடும்பத்துடன் டூர் சென்ற புகழ் | ‛தக் லைப்' : சிம்பு நடிப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு | புஷ்பாவால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை : பஹத் பாசில் ஓபன் டாக் | தொடரும் 'மலையாளி பிரம் இந்தியா' கதை திருட்டு சர்ச்சை | பிறந்தநாளில் பிணமாக படம் வெளியிட்ட அப்புக்குட்டி |
சாஹோ படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து வருகிறார் நடிகர் பிரபாஸ். இதில் ராதே ஷ்யாம் படம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது.. ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் தாண்டி விட்டது. இந்தநிலையில் தற்போது பிரபாஸின் இன்னொரு படமான 'சலார்' படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.
முதல் நாள் படப்பிடிப்பு கோதாவரிக்கரையில் நடைபெற்றது. முதல்நாளே ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதேசமயம் சூட்டோடு சூடாக, பிரபாஸ் படப்பிடிப்பில் பங்கேற்கும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் லீக்காகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுபோன்று வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு எச்சரித்துள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் கேமராவுக்கு மிக அருகில் நின்று பிரபாஸை வீடியோ எடுத்துள்ளதால், தற்போது யூனிட்டில் உள்ளவர்களிடமும் பாதுகாப்பு கெடுபிடிகளை அதிகரித்துள்ளது.