எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை: ராஜமவுலி பேச்சால் புது சர்ச்சை | கதைநாயகன் ஆனார் மொட்டை ராஜேந்திரன்: தனது பிடிவாதத்தை தளர்ப்பாரா? | எங்கள் மண வாழ்க்கை ரகசியம் - 'சரிம்மா, சாரிம்மா': நடிகை ரோஜா | ஆஸ்கருக்கு செல்லும் 2 தமிழ் படங்கள் | 8 வருடங்களுக்கு பிறகு தமிழ் திரையில் ருஹானி சர்மா | தேர்தல் கமிஷன் தூதர் பதவியில் இருந்து நீது சந்திரா நீக்கம் | பிளாஷ்பேக்: பாலச்சந்திரமேனன் இயக்கிய தமிழ் படம் | பிளாஷ்பேக்: நிலவொளியில் ஒளிப்பதிவு செய்த முதல் ஒளிப்பதிவாளர் | ‛வாரணாசி' படத்தில் நடிக்க 30 கோடி சம்பளம் வாங்கிய பிரியங்கா சோப்ரா! | பிளாஷ்பேக்: எம் ஜி ஆர், சிவாஜியை மீண்டும் ஒரு படத்தில் நடிக்க வைக்க விரும்பிய ஏ வி எம் |

சாஹோ படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று படங்களில் நடித்து வருகிறார் நடிகர் பிரபாஸ். இதில் ராதே ஷ்யாம் படம் கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது.. ஆதிபுருஷ் படத்தின் படப்பிடிப்பு பாதிக்கு மேல் தாண்டி விட்டது. இந்தநிலையில் தற்போது பிரபாஸின் இன்னொரு படமான 'சலார்' படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. கேஜிஎப் பட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடிக்கிறார்.
முதல் நாள் படப்பிடிப்பு கோதாவரிக்கரையில் நடைபெற்றது. முதல்நாளே ஆக்சன் காட்சிகள் படமாக்கப்பட்டன. அதேசமயம் சூட்டோடு சூடாக, பிரபாஸ் படப்பிடிப்பில் பங்கேற்கும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் லீக்காகி படக்குழுவினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுபோன்று வீடியோக்கள், புகைப்படங்களை வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு எச்சரித்துள்ளது. மேலும் படப்பிடிப்பு தளத்தில் கேமராவுக்கு மிக அருகில் நின்று பிரபாஸை வீடியோ எடுத்துள்ளதால், தற்போது யூனிட்டில் உள்ளவர்களிடமும் பாதுகாப்பு கெடுபிடிகளை அதிகரித்துள்ளது.