ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
தமிழ்த் திரையுலகில் 2006ம் ஆண்டு வெளிவந்த 'சிவப்பதிகாரம்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மம்தா மோகன்தாஸ். அதன்பின் 'குரு என் ஆளு, தடையறத் தாக்க,' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார்.
சுமார் 15 வருட இடைவெளிக்குப் பிறகு தற்போது மீண்டும் தமிழில் நடிக்க ஆரம்பித்துள்ளார். பிரபுதேவா கதாநாயகனாக நடிக்கும் 'ஊமை விழிகள்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கடுத்து விஷால், ஆர்யா இணைந்து நடிக்கும் 'எனிமி' படத்திலும் ஆர்யா ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.
இத்தனை வருட இடைவெளியில் மீண்டும் கதாநாயகியாக நடிக்க வருவது ஆச்சரியமான விஷயம்தான். கடந்த வருடம் வெளிவந்த 'பாரன்சிக்' மலையாளப் படத்தில் மம்தாவின் நடிப்பு விமர்சகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
மலையாளத்தில் பல படங்களில் நடித்துள் மம்தா சிறந்த பாடகியும் கூட. தமிழில் விஜய் நடித்து வெளிவந்த 'வில்லு' படத்தில் இடம் பெற்ற சூப்பர் ஹிட் பாடலான 'டாடி மம்மி வீட்டிலில்ல' பாடலைப் பாடியவர் மம்தா தான். பின்னர் 'கோவா' படத்திலும் பாடியிருக்கிறார்.