தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டதும் விஜய் நடித்த 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் தான் ரீஎன்ட்ரி ஆனார். அந்தப் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
தற்போது 'ஆச்சார்யா' என்ற நேரடித் தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. அதற்கடுத்து மலையாள 'லூசிபர்' ரீமேக், தமிழ் 'வேதாளம்' ரீமேக் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார். இதனிடையே, அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்க ஆர்வமாக உள்ளாராம். அப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை ஏற்கெனவே சிரஞ்சீவியின் தயாரிப்பு நிறுவனம் தான் வாங்கி வைத்துள்ளதாம்.
தற்போது திட்டமிட்டுள்ள படங்களை முடித்துவிட்டு அந்தப் படத்தைச் செய்யலாம் என யோசித்து வருகிறாராம். நேரடிப் படங்களை விட ரீமேக் படங்கள் கொஞ்சம் சிக்கல் இல்லாமல் இருக்கும் என்பதுதான் அதற்குக் காரணம் என்கிறார்கள்.