ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? | விஜய் தரப்பின் பிரஷரால் வேகம் எடுக்கும் 'ஜனநாயகன்' | எனக்குள் அந்த தீ எரியும் வரை சினிமாவில் நடித்துக்கொண்டே இருப்பேன்! - கமல்ஹாசன் சொன்ன பதில் | தயாரிப்பாளர் ராஜேஷ் நடிக்கும் படத்தின் டைட்டில் 'அங்கீகாரம்'! பர்ஸ்ட் லுக் வெளியானது!! | 50வது படத்தில் வித்தியாசமான திருநங்கை வேடம்! - சிம்பு வெளியிட்ட தகவல் |
தெலுங்குத் திரையுலகின் சீனியர் ஹீரோவான சிரஞ்சீவி மீண்டும் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டதும் விஜய் நடித்த 'கத்தி' படத்தின் தெலுங்கு ரீமேக் மூலம் தான் ரீஎன்ட்ரி ஆனார். அந்தப் படம் அவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது.
தற்போது 'ஆச்சார்யா' என்ற நேரடித் தெலுங்குப் படத்தில் நடித்து வருகிறார் சிரஞ்சீவி. அதற்கடுத்து மலையாள 'லூசிபர்' ரீமேக், தமிழ் 'வேதாளம்' ரீமேக் ஆகிய படங்களில் நடிக்க உள்ளார். இதனிடையே, அஜித் நடித்த 'என்னை அறிந்தால்' படத்தின் தெலுங்கு ரீமேக்கிலும் நடிக்க ஆர்வமாக உள்ளாராம். அப்படத்தின் தெலுங்கு ரீமேக் உரிமையை ஏற்கெனவே சிரஞ்சீவியின் தயாரிப்பு நிறுவனம் தான் வாங்கி வைத்துள்ளதாம்.
தற்போது திட்டமிட்டுள்ள படங்களை முடித்துவிட்டு அந்தப் படத்தைச் செய்யலாம் என யோசித்து வருகிறாராம். நேரடிப் படங்களை விட ரீமேக் படங்கள் கொஞ்சம் சிக்கல் இல்லாமல் இருக்கும் என்பதுதான் அதற்குக் காரணம் என்கிறார்கள்.