எனக்கும் ஒரு எதிர்காலம் உள்ளது... வதந்தி பரப்பாதீங்க : பவித்ரா லட்சுமி | பிரியங்கா மோகனின் துருக்கி கனவு நனவானது | லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி - அப்டேட் கொடுத்த விக்னேஷ் சிவன் | கார் பந்தய பயிற்சியின்போது மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித் | ரீ-ரிலீஸில் சச்சின் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு | விவாகரத்து நெருங்கிவிட்டது என பதிவு போட்ட ரசிகருக்கு சோனாக்ஷி கொடுத்த பதிலடி | ரயில் ஜன்னல் கம்பி வழியாக மாளவிகா மோகனனிடம் முத்தம் கேட்ட மர்ம நபர் | ரெட்ரோ படத்தின் டிரைலரை உருவாக்கிய அல்போன்ஸ் புத்ரன் | கேரள அரசு விருதை கட்டி அணைத்தபடி தூங்கிய பிரேமலு நடிகர் : வைரலாகும் புகைப்படம் | போதை பொருள் வழக்கு : நடிகர் சைன் டாம் சாக்கோ கைது |
பாகுபலி படங்களின் பிரம்மாண்டத்திற்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படம் 'ஆர்ஆர்ஆர்'. ஜுனியர் என்டிஆர், ராம்சரண், ஆலியா பட், அஜய் தேவகன், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிக்கும் படம் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்திய சுதந்திர போராட்ட காலக் கதையாக உருவாகி வரும் இப்படம் சுமார் 400 கோடி பட்ஜெட்டில் தயாராகி வருகிறது.
இப்படம் பற்றிய முக்கிய அறிவிப்பு ஒன்று இன்று வெளியாகும் என அறிவித்து இருந்தனர். அது படத்தின் வெளியீட்டு தேதியாக கூட இருக்கலாம் என நாம் சொல்லியிருந்தோம். ஆம் இப்போது அது உறுதியாகி உள்ளது. தசரா பண்டிகையை முன்னிட்டு அக்., 13ல் படம் வெளிவருவதாக படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும், ஹிந்தியிலும் இப்படம் வெளியாக உள்ளது. இதுதவிர இன்னும் சில மொழிகளில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்த ''அக்., 13ல் நீரும், நெருப்பும் ஒன்றிணைந்து இதுவரை பார்த்திராத ஒரு புதிய அனுபவத்தை, இந்திய சினிமாவின் மிகப்பெரிய, மறக்கமுடியாத ஒரு அனுபவத்தை உங்களுக்கு வழங்க உள்ளது. சவாரி ஆரம்பம்'' என படக்குழு டுவிட்டரில் தெரிவித்துள்ளது. அதோடு புதிய போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதில் ஜுனியர் என்டிஆர் புல்லட்டிலும், ராம் சரண் குதிரையிலும் ஆக்ரோஷமாக சவாரி செய்கின்றனர். பின்னணியில் ஆர்ஆர்ஆர் என தலைப்பு இடம் பெற்றுள்ளது.