நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
இந்தியத் திரையுலகத்தில் அதிக வசூலைக் குவித்த படங்களில் முதலிடத்தில் 'டங்கல்' படமும், இரண்டாவது இடத்தில் 'பாகுபலி 2' படமும் உள்ளது. அடுத்து மூன்றாவது இடத்தை 'புஷ்பா 2' பிடித்துள்ளது. இப்படம் மூன்றாவது இடத்தில் வந்ததை அடுத்து 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' படங்கள் முறையே நான்கு மற்றும் ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளன.
11 நாள் முடிவில் 'புஷ்பா 2' படம் 1409 கோடிகளை வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 'ஆர்ஆர்ஆர்' படம் 1350 கோடியுடன் நான்காவது இடத்திலும், 'கேஜிஎப் 2' படம் 1250 கோடியுடன் ஐந்தாவது இடத்திலும் தற்போது உள்ளன.
'பாகுபலி 2' படத்தின் மொத்த வசூல் 1800 கோடிக்கும் கொஞ்சம் கூடுதலாக முடிவுக்கு வந்தது. அந்த வசூலை 'புஷ்பா 2' படம் முறியடிக்குமா என்பதுதான் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.