ஷபானா ஆஸ்மியுடன் இணைந்து நடித்துள்ள ஜோதிகா : காலில் விழுந்து ஆசி | மார்ச் முதல் வாரத்தில் ஓடிடிக்கு வரும் அஜித்தின் விடாமுயற்சி! | ரஜினியின் கூலி படத்தில் சிங்கிள் பாடலுக்கு நடனமாடும் பூஜா ஹெக்டே | ஆசிரியரின் அறிவுரையை மாத்தி யோசித்த பிரதீப் ரங்கநாதன்; சுவாரஸ்ய பின்னணி என்ன? | 'மரகத நாணயம் 2' கதை பெரியதாக இருக்கும்: ஆதி | 'தி கோட்' படத்தின் உண்மையான வசூல் என்ன?: தயாரிப்பாளர் சொன்ன தகவல் | தயாராகிறது 'சுந்தரா டிராவல்ஸ்' இரண்டாம் பாகம் | மீண்டும் தந்தையுடன் இணைந்து நடிக்கும் கீர்த்தி பாண்டியன் | சம்பளமா? காப்பிரைட்டா?: இசை அமைப்பாளர்களுக்கு மலையாள தயாரிப்பாளர் சங்கம் நிபந்தனை | சீரியல் நடிகை மான்சி ஜோஷிக்கு திருமணம் |
மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுகிறேன் என்று கூறி அவ்வப்போது பரபரப்பு செய்திகளுக்கு தீனி போடுபவர் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா. சமீபத்தில் கூட ஸ்லோமோஷன் காட்சிகள் இல்லாமல் நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த அளவுக்கு மாஸ் கிடைத்திருக்காது என்று கிண்டல் அடிக்கும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கே ஜி எப் 2 படம் குறித்தும் அதே பாணியில் கிண்டலாக விமர்சித்துள்ளார் ராம் கோபால் வர்மா.
இது குறித்து அவர் கூறும்போது, “கேஜிஎப் 2 படத்தை பார்க்க துவங்கியதுமே 15 நிமிடத்திற்கு மேல் என்னால் தொடர்ந்து அந்த படத்தை பார்க்க முடியவில்லை. அதன் தாக்கத்திலிருந்து வெளிவருவதற்காக பால்கனிக்கு வந்து வெளிக்காற்றை நன்றாக சுவாசித்து கொஞ்சம் யோகா பயிற்சி செய்து விட்டு அதன் பிறகு அடுத்த 15 நிமிடங்களை பார்த்தேன். மீண்டும் அதே போல தான் தொடர்ந்தது. இடைவேளைக்குப் பிறகு உன்னால் இந்த படத்தை முழுதாக பார்க்க முடியாது, பேசாமல் பார்ப்பதை நிறுத்தி விடு என்று என்னுடைய மனமே கட்டளையிட்டது.
அடுத்த முறை என்னுடன் ஒரு எழுத்தாளரையும் வைத்துக் கொண்டு இந்த படத்தை பார்த்தேன். அவரும் படம் பார்க்கும்போது இந்த காட்சிகள் எல்லாம் கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல் இருக்கிறதே ? எப்படி இதெல்லாம் சாத்தியம் என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்தார். நான் அவரிடம் சொன்னேன்.. படத்தின் கதை பற்றி விவாதிக்கலாம். படத்தின் வெற்றி பெற்று விவாதிக்கவே முடியாது.. நம் இருவருக்கு பிடிக்கவில்லை. ஆனால் லட்சக்கணக்கானோருக்கு பிடித்திருக்கிறது.. என்ன செய்வது ?” என்று கூறியுள்ளார் ராமகோபால் வர்மா.