இந்த ஆண்டில் திரிஷா நடிப்பில் ஆறு படங்கள் ரிலீஸ் | பேட்ட படத்திற்கு பிறகு ரெட்ரோ படம் தான் : கார்த்திக் சுப்பராஜ் | சுந்தர்.சி இயக்கத்தில் கார்த்தி உறுதி | முதல் முறையாக ஜோடி சேரும் துல்கர் சல்மான், பூஜா ஹெக்டே | அஜித் வைத்த நம்பிக்கை குறித்து நெகிழ்ந்த அர்ஜுன் தாஸ் | 7 ஆண்டுகளுக்குப் பிறகு படப்பிடிப்பை துவங்கிய கிச்சா சுதீப்பின் பிரமாண்ட படம் | 15 ஆண்டு காதலரை கரம் பிடித்தார் அபிநயா | போதைப்பொருள் பயன்படுத்தி அத்துமீறல் : பீஸ்ட், குட் பேட் அக்லி நடிகர் மீது மலையாள நடிகை புகார் | 14 வருடங்களுக்குப் பிறகு தனுஷ் - தேவிஸ்ரீபிரசாத் கூட்டணி | பெண் இயக்குனர் படத்தில் லண்டன் நடிகை |
மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுகிறேன் என்று கூறி அவ்வப்போது பரபரப்பு செய்திகளுக்கு தீனி போடுபவர் பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா. சமீபத்தில் கூட ஸ்லோமோஷன் காட்சிகள் இல்லாமல் நடிகர் ரஜினிகாந்துக்கு இந்த அளவுக்கு மாஸ் கிடைத்திருக்காது என்று கிண்டல் அடிக்கும் விதமாக கருத்து தெரிவித்திருந்தார். அதேபோல சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகப்பெரிய வெற்றி பெற்ற கே ஜி எப் 2 படம் குறித்தும் அதே பாணியில் கிண்டலாக விமர்சித்துள்ளார் ராம் கோபால் வர்மா.
இது குறித்து அவர் கூறும்போது, “கேஜிஎப் 2 படத்தை பார்க்க துவங்கியதுமே 15 நிமிடத்திற்கு மேல் என்னால் தொடர்ந்து அந்த படத்தை பார்க்க முடியவில்லை. அதன் தாக்கத்திலிருந்து வெளிவருவதற்காக பால்கனிக்கு வந்து வெளிக்காற்றை நன்றாக சுவாசித்து கொஞ்சம் யோகா பயிற்சி செய்து விட்டு அதன் பிறகு அடுத்த 15 நிமிடங்களை பார்த்தேன். மீண்டும் அதே போல தான் தொடர்ந்தது. இடைவேளைக்குப் பிறகு உன்னால் இந்த படத்தை முழுதாக பார்க்க முடியாது, பேசாமல் பார்ப்பதை நிறுத்தி விடு என்று என்னுடைய மனமே கட்டளையிட்டது.
அடுத்த முறை என்னுடன் ஒரு எழுத்தாளரையும் வைத்துக் கொண்டு இந்த படத்தை பார்த்தேன். அவரும் படம் பார்க்கும்போது இந்த காட்சிகள் எல்லாம் கொஞ்சம் கூட லாஜிக் இல்லாமல் இருக்கிறதே ? எப்படி இதெல்லாம் சாத்தியம் என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்தார். நான் அவரிடம் சொன்னேன்.. படத்தின் கதை பற்றி விவாதிக்கலாம். படத்தின் வெற்றி பெற்று விவாதிக்கவே முடியாது.. நம் இருவருக்கு பிடிக்கவில்லை. ஆனால் லட்சக்கணக்கானோருக்கு பிடித்திருக்கிறது.. என்ன செய்வது ?” என்று கூறியுள்ளார் ராமகோபால் வர்மா.