ஆறு வருடமாக பாலியல் டார்ச்சர் செய்த துணை நடிகை மீது போலீஸில் நடிகர் புகார் | பிடிவாதமாக பெட்ரோலை குடித்த அஜித்; திருப்பதியில் அஜித் எடுத்த ரிஸ்க் | பிளாஷ்பேக்: முதல் ஒளி வடிவம் பெற்ற ஜெயகாந்தனின் “உன்னைப் போல் ஒருவன்” | ஹிந்தி பட புரமோஷனில் காதலுக்கு விளக்கம் கொடுத்த தனுஷ் | ‛நூறு சாமி'க்காக காத்திருக்கும் ‛லாயர்' | மனைவிக்கு ‛தடா' போட்ட சார்பட்டா நடிகர் | நடிகருக்காக சீன்களை சுடும் இயக்குனர்கள் | லாவண்யாவின் ஸ்(வரம்) | குழந்தை நட்சத்திரத்தில் இருந்து நாயகி வரை: தன்னம்பிக்கையோடு தனலெட்சுமி | ‛காந்தாரா' கண்டெடுத்த அய்ரா |

இந்தியத் திரையுலகத்தில் 1000 கோடி வசூலை ஆரம்பித்து வைத்த தென்னிந்திய படம் 'பாகுபலி 2'. ராஜமவுலி இயக்கத்தில், பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் 2017ம் ஆண்டு வெளிவந்த படம் சுமார் 1800 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை புரிந்தது.
அப்படத்திற்குப் பிறகு வெளிவந்த 'கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களும் 1000 கோடி வசூலைக் கடந்த படங்களாக அமைந்தன. ஆனாலும், 'பாகுபலி 2' படத்தைத் தியேட்டர்களில் வந்து பார்த்தவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது 'கேஜிஎப் 2, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை அதில் பாதி தான் என படத்தின் தயாரிப்பாளரான ஷோபு எர்கட்டா சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“பாகுபலி 2' படத்திற்காக 10 கோடிக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகள் விற்பனையாகின. அதற்கான டிக்கெட் கட்டணம் 125 ரூபாய்தான். ஆனால், 'ஆர்ஆர்ஆர், கேஜிஎப் 2' படங்களுக்கு அதில் 50 சதவீத அளவுதான் மக்கள் தியேட்டர்களுக்கு வந்தார்கள். இனி வரும் படங்கள் 'பாகுபலி 2' படத்தின் வசூலை நெருங்கலாம். தற்போது டிக்கெட் கட்டணம் ரூ 300 வரை இருக்கிறது. அதிகம் பேர் பார்த்த படம் என்பதில் 'ஷோலே' படத்திற்குப் பிறகு 'பாகுபலி 2' படம் இரண்டாவது இடத்தில் உள்ளது. அப்படத்திற்கு 13 கோடி டிக்கெட்டுகள் விற்கப்பட்டன,” என்று தெரிவித்துள்ளார்.