புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
நடிகர் விஷால் வீடு, மற்றும் அலுவலகத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சேவை வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது அங்கிருந்த டாக்குமெண்ட்டுகளை எடுத்துச் சென்றனர். அதை ஆய்வு செய்ததில் விஷால் ஒரு கோடி ரூபாய் வரை சேவை வரி செலுத்தாதது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் மீது சேவை வரித்துறையினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் விஷாலுக்கு பலமுறை சம்மன் அனுப்பியும் ஆஜராகாமல் இருந்தார். "கைது செய்ய நேரிடும்" என்று நீதிமன்றம் விடுத்த எச்சரிக்கைக்கு பிறகு, இரண்டு முறை கோர்ட்டில் ஆஜரானார். அப்போது நீபதிகள் குற்றத்தை ஒப்புக் கொண்டு வரியை செலுத்திவிட்டால் வழக்கு முடித்து வைக்கப்படும் என்றனர். அதை ஏற்க மறுத்த விஷால், தான் குற்றமற்றவன் என்று வழக்கை நடத்தி நிரூபிப்பேன் என்றார். இதைத் தொடர்ந்து வழக்கை தொடர்ந்து நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.
நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இந்த முறை விஷால் ஆஜராகவில்லை. ஆஜராகாத காரணத்தை விஷால் வழக்கறிஞர் மனுவாக தாக்கல் செய்தார். அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் வழக்கை வருகிற ஜனவரி 2ந் தேதிக்கு ஒத்தி வைத்தது.