புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
ரஜினி நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் ரூ.500 கோடிக்கும் அதிகமான செலவில் லைகா நிறுவனம் தயாரித்துள்ள 2.0 படம் இன்று(நவ., 29) வெளியானது. இந்தப்படம் கன்னடத்திலும் வெளியானது. ஆனால் கன்னடத்தில் 2.ஓ படத்தை திரையிடக்கூடாது என்று கன்னட சலுவளி கட்சியின் தலைவரும், கன்னட அமைப்புகளின் கூட்டமைப்புத் தலைவருமான வாட்டாள் நாகராஜ் நேற்று போராட்டம் நடத்தினார்.
கர்நாடக திரைப்பட வர்த்தக சபை அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அவர்கள் ரஜினிக்கு எதிராகவும், 2.0 படத்திற்கு எதிராகவும் கோஷம் எழுப்பினார்கள். பின்னர் நிருபர்களிடம் பேசிய வாட்டாள் நாகராஜ் "கர்நாடகத்தில் பிற மொழி சினிமாக்களின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதனால் கன்னட படங்கள் அதிக அளவில் பாதிக்கப்படுகிறது.
2.0 படம் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகிறது. ஓடிக்கொண்டிருந்த கன்னடப் படங்கள் தியேட்டரை விட்டு தூக்கப்பட்டுள்ளது. இந்த நிலை நீடித்தால் கன்னட சினிமா அழிந்து விடும். இதனை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். 2.0 படம் திரையிடப்படும் தியேட்டர்கள் முன் போராட்டம் நடத்துவோம்" என்றார். இந்தப் போராட்டத்தால் பெங்களூருவில் பெரும்பாலான தியேட்டர்களில் 2.0 திரையிடப்படவில்லை.