தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் | கனா தர்ஷனின் புதிய பட அறிவிப்பு | இளம் நாயகிகளும் பொறாமைப்படும் 'மார்கண்டேயினி' த்ரிஷா | தமிழ் ரசிகர்களைக் கவராத 'புஷ்பா… புஷ்பா…' |
கேரளாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பை, அதிதீவிர இயற்கை பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. 300-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். நிலச்சரிவு, வெள்ளத்தால் லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. இந்நிலையில் கேரளாவிற்கு மற்ற மாநிலங்களும், பல மாநில திரையுலக பிரபலங்களும் நிதி உதவி அளித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவை பொறுத்தமட்டில் கமல், ரஜினி, விக்ரம், சூர்யா, கார்த்தி, விஜய் சேதுபதி, தனுஷ், ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நிதி உதவி அளித்த நிலையில் நடிகர்கள் விஜய், அஜித் இந்த விஷயத்தில் அமைதியாக இருந்தது சர்ச்சையை கிளப்பின.
இந்நிலையில் நடிகர் விஜய் ரூ.70 லட்சம் நிதி உதவி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரசிகர்கள் மூலமாக இந்த தொகையை அவர் கொடுத்திருப்பதாக கூறப்படுகிறது.