கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் |

நடிகர் விஜய் தற்போது வெங்கட்பிரபு இயக்கத்தில் ‛கோட்' என்ற படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையே அரசியலில் குதித்துள்ள விஜய், தனது கட்சிக்கு ‛தமிழக வெற்றி கழகம்' என பெயரிட்டுள்ளார். எந்தவித பத்திரிகையாளர் சந்திப்போ, பொதுக்கூட்டமோ இல்லாமல் அரசியலில் நுழைந்ததை வெளிப்படுத்திய விஜய், கோட் படத்தை அடுத்து இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பதாக அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் கோட் படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வரும் நிலையில், படப்பிடிப்பு தளத்தில் விஜய் ரசிகர்கள் குவிந்தனர். அப்போது படப்பிடிப்பு வாகனத்தின் மீது ஏறிய விஜய், ரசிகர்களை நோக்கி கையசைத்தார். அரசியலில் நுழைந்த பிறகு முதன்முறையாக ரசிகர்களை சந்தித்த விஜய்க்கு, ரசிகர்கள் மாலை வழங்கினர். அதனை பெற்றுக்கொண்ட விஜய், கழுத்தில் அணிவித்தும், செல்பி எடுத்தும் ரசிகர்களை குஷிப்படுத்தினார்.