மனைவியின் பிரிவால் ஒன்றரை ஆண்டு தினந்தோறும் குடித்தேன் : அமீர்கான் | கண்ணப்பா படத்தை இயக்க தெலுங்கு இயக்குனர்கள் முன் வரவில்லை : விஷ்ணு மஞ்சு ஓப்பன் டாக் | சென்சாருக்கு எதிராக மலையாள திரையுலகினர் நடத்திய நூதன போராட்டம் | நீ பிரச்னைக்குரியவன் அல்ல : வில்லன் நடிகருக்கு மம்முட்டி சொன்ன அட்வைஸ் | யோகி பாபு, ரவி மோகன் படம் ஆகஸ்ட்டில் துவக்கம் | விஜய் சேதுபதி, பூரி ஜெகந்நாத் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சாலைக்கு எம்.எஸ்.வி. பெயர் : முதல்வருக்கு நன்றி கூறி மகன் உருக்கம் | என் 5 படங்களின் கதைகளையும் முதலில் இந்த ஹீரோவிடம் தான் கூறினேன் : வெங்கி அட்லூரி | ‛பிளாக்மெயில்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | என் தந்தைக்கு புல் மீல்ஸ்... எனக்கு ஒரு ஸ்பூன் சாதம் : சல்மான்கான் சொன்ன டயட் ரகசியம் |
சமூக வலைத்தளங்களில் அஜித், விஜய் ரசிகர்களுக்குப் பிறகு அதிகமாக சண்டையிட்டுக் கொள்பவர்கள் ரஜினி, கமல் ரசிகர்கள். 1970களில் பிறந்தவர்களுக்கு ரஜினி, கமல் படங்கள் தான் மிகப் பெரும் என்டர்டெயின்மென்ட். 80களில், 90களில் ரஜினி, கமல் இடையேதான் கடும் போட்டி நிலவியது.
சமூக வலைதளங்கள் இல்லாத அந்தக் காலங்களில் வீட்டுத் திண்ணைகளில், தெருக்களில், பூங்காக்களில், கிரிக்கெட் மைதானங்களில் கூட ரஜினி, கமல் ரசிகர்கள் சண்டை போட்டுக் கொள்வது வழக்கம். இத்தனை வருடங்களான பிறகும் அவர்களது சண்டை இன்னும் ஓயவில்லை. இந்த சமூக வலைதள காலத்திலும் அந்த 'பூமர் அங்கிள்'கள் சண்டை போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கடந்த வாரம் வெளியான 'மஞ்சும்மேல் பாய்ஸ்' மலையாளப் படத்தில் 'குணா' படத்தின் 'ரெபரன்ஸ்' இருப்பதால் அந்தப் படம் தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி அரங்கு நிறைந்த காட்சிகளாக பல ஊர்களில் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் 'குணா' படம் பற்றியும், அப்படத்தில் கமல்ஹாசனின் நடிப்பு பற்றியும், கமல் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் சிலாகித்துப் பதிவிட்டு வருகிறார்கள்.
33 ஆண்டுகளுக்குப் பிறகும், படம் வெளிவந்த போது பிறக்காத, அல்லது குழந்தையாக இருந்த 'மஞ்சும்மல் பாய்ஸ்' குழுவினர் கமல் மீதும், 'குணா' மீதும் தங்களது அபிமானம் பற்றிப் பேசி வருகிறார்கள். அது ரஜினி ரசிகர்களை வெறுப்பேற்றியுள்ளது. அதனால், அதே நாளில் வெளிவந்த 'தளபதி' படம் பற்றியும் ரஜினி ரசிகர்கள் பல விஷயங்களைக் குறிப்பிட்டு பதிவிட்டு வருகிறார்கள். இதனால், ரஜினி, கமல் ரசிகர்களிடையே 'தளபதி' சிறந்த படமா, 'குணா' சிறந்த படமா என இப்போது சண்டை நடந்து வருகிறது.