பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

கோபி நயினார் இயக்கிய அறம் படத்தில் நடித்தவர் நயன்தாரா. அந்த படத்தில் அவர் நடித்திருந்த கலெக்டர் வேடம் நயன்தாராவின் இமேஜை உயர்த்தியதோடு, அவர் கொடுத்திருந்த பர்பாமென்ஸ் அவரை மேலும் பேச வைத்தது.
இதனால் மீண்டும் கோபி நயினாரின் இயக்கத்தில் நடிக்க தயாராகி விட்டார் நயன்தாரா. அதன் காரணமாக தற்போது அடுத்த படத்திற்கான கதை வேலைகளில் தீவிரமடைந்துள்ளார் கோபி நயினார். ஆனால் இந்த படம் அறம்-2 என்று சொல்லப்பட்டு வருவதால், முந்தைய படத்தின் தொடர்ச்சியான கதையில் நயன்தாரா நடிப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.
இதுகுறித்து கோபி நயினார் தரப்பை கேட்டால், இந்த படத்தின் டைட்டீலை தற்போதைக்கு அறம்-2 என்கிறோம். ஆனால் படத்தின் கதை முந்தைய படத்தின் தொடர்ச்சி அல்ல. இந்த படமும் சமூக நோக்கமுள்ள கதைதான் என்றாலும், இதில் நயன்தாரா நடிக்கும் கதாபாத்திரம் அறம் படத்தில் இருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும் என்கிறார்கள். இந்த அறம்-2 படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் மாதம் தொடங்குகிறது.