பராசக்தி முதல் பாடலான 'அடி அலையே' வெளியீடு | தயாரிப்பாளர்களுக்கு கூட பாடல் உரிமையை வழங்கியது இல்லை: இளையராஜா | 'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு : நவ., 8ல் முதல் பாடல் | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் |

இந்தியத் திரையுலகத்தில் முடிசூடா ராணியாக விளங்கியவர் நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தென்னிந்தியத் திரையுலகத்தை ஆட்சி செய்து பின், ஹிந்தித் திரையுலகத்திலும் தனி ராணியாக விளங்கினார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்தது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சுமார் 50 ஆண்டுகள் திரையுலகத்தில் தனக்கென தனி இடத்தை ஏற்படுத்தியவர். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். திரையுலகத்தில் அவரும் பல தடங்கல்களைக் கடந்துதான் நம்பர் 1 இடத்திற்கு வந்தார்.
ஸ்ரீதேவி மறைந்ததுமே அவரது வாழ்க்கை வரலாற்றை யாராவது படமாகத் தயாரிக்கலாம் என்ற பேச்சு எழுந்தது. ஸ்ரீதேவியின் தீவிர ரசிகரான இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க யாருக்குமே தகுதியில்லை என்று சொன்னார்.
இருந்தாலும், ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் ஸ்ரீதேவி பற்றி படம் ஒன்றைத் தயாரிக்கும் திட்டத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது மேற்கொண்டு நடக்குமா என்பது விரைவில் தெரிய வரலாம்.