தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? | பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா எங்கே? | அரசன் படத்தின் படப்பிடிப்பு பற்றிய புதிய அப்டேட் |

இந்தியத் திரையுலகத்தில் முடிசூடா ராணியாக விளங்கியவர் நடிகை ஸ்ரீதேவி. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தென்னிந்தியத் திரையுலகத்தை ஆட்சி செய்து பின், ஹிந்தித் திரையுலகத்திலும் தனி ராணியாக விளங்கினார். அவரது திடீர் மறைவு திரையுலகினரை அதிர்ச்சியடைய வைத்தது.
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி சுமார் 50 ஆண்டுகள் திரையுலகத்தில் தனக்கென தனி இடத்தை ஏற்படுத்தியவர். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பலதரப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார். திரையுலகத்தில் அவரும் பல தடங்கல்களைக் கடந்துதான் நம்பர் 1 இடத்திற்கு வந்தார்.
ஸ்ரீதேவி மறைந்ததுமே அவரது வாழ்க்கை வரலாற்றை யாராவது படமாகத் தயாரிக்கலாம் என்ற பேச்சு எழுந்தது. ஸ்ரீதேவியின் தீவிர ரசிகரான இயக்குனர் ராம்கோபால் வர்மா, ஸ்ரீதேவி கதாபாத்திரத்தில் நடிக்க யாருக்குமே தகுதியில்லை என்று சொன்னார்.
இருந்தாலும், ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் ஸ்ரீதேவி பற்றி படம் ஒன்றைத் தயாரிக்கும் திட்டத்தில் இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது மேற்கொண்டு நடக்குமா என்பது விரைவில் தெரிய வரலாம்.




