சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
டைரக்டர் விஜய் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள படம் கரு. தெலுங்கு நடிகர் நாக செளரியா நாயகனாக நடித்துள்ள இந்த படம் தெலுங்கில் கனம் என்ற பெயரில் வெளியாகிறது.
இந்த படம் குறித்து சாய் பல்லவி கூறுகையில், அம்மா - மகள் இருவரும் அன்புக்காக ஏங்கும் கதையில் இந்த படம் உருவாகியுள்ளது. உணர்வுப் பூர்வமான இந்த கதையை கமர்சியல் நோக்கமில்லாமல் யதார்த்தமாக இயக்கியிருப்பது உற்சாகமளிக்கிறது. அதற்காக இந்த படத்தை தயாரித்த லைகா புரொடக்சன்ஸ் மற்றும் என்.வி.பிரசாத் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படம் வெளியான பிறகு கருவில் நாயகனாக நடித்துள்ள நாக செளரியாவின் பாத்திரம் பெரிதாக பேசப்படும்.
இந்த படத்தில் எனது மகளாக நடித்துள்ள வெரோனிகாவிடம் நிறைய அன்பு வளர்த்து விட்டேன். அதன்காரணமாக அவளது பெற்றோரிடம் வெரோனிகாவை எனது வளர்ப்பு மகளாக கொடுத்து விடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். அந்த அளவுக்கு அவளும் என் மீது அளவற்ற அன்பு வைத்திருக்கிறாள் என்கிறார் சாய்பல்லவி.