ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சிவாஜி எம்,ஜி.ஆர் ஆகிய இரு ஆளுமைகளை தன் வசனங்களால் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக மாற்றியவர் கருணாநிதி என நடிகர் கமலஹாசன் கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு நடிகர் கமலஹாசன் பேசியதாவது:
சினிமாவில் இருந்த போது அரசியலையும், அரசியலில் இருந்த போது சினிமாவையும் மறக்காமல் இருந்தவர் கருணாநிதி அவர் தன்னையும் வளர்த்தார், தமிழையும் வளர்த்தார், தமிழ்நாட்டையும் வளர்த்தார். கருணாநிதியின் பண்பு முதல்வர் ஸ்டாலினிடமும் உள்ளது.நெருங்கிய நண்பர் விஜயகாந்தின் இறுதிச்சடங்கை சிறப்பான முறையில் நடத்தி தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் . கருணாநிதி இருந்தாலும்இல்லாவிட்டாலும் அவர் எனக்கு சூட்டிய கலைஞானி என்ற பட்டம் என்னை தொடர்கிறது என்னைத் தொடரும்.
எனது தமிழ் ஆசான் எம்.ஜி.ஆர்
தமிழும் கருணாநிதியும், சினிமாவும் கருணாநிதியும், அரசியலும் கருணாநிதியும் பிரிக்க முடியாதவை.எனது தமிழ் ஆசான்கள் மூன்று பேர் . கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி, எம்.ஜி.ஆர். என பேசினார்.