பிளாஷ்பேக்: தமிழ் திரையிசையில் முதல் கானா பாடலை அறிமுகப்படுத்திய “பொம்மலாட்டம்” | 2046ல் என்ன நடக்கும் ? ரஜிஷா விஜயனின் புதிய படம் பதில் சொல்லும் | ஆல்பம் பாடலில் அதிர வைக்கும் அழகுடன் மஞ்சு வாரியர் | ‛ஐ நோபடி' படப்பிடிப்பை நிறைவு செய்த பிரித்விராஜ் | ‛திரிஷ்யம் 3' கிளைமாக்ஸ் ஷாக்கிங் ஆக இருக்கும் : நடிகை ஆஷா சரத் | சம்பளத்துக்கு பதிலாக ஷேர் வாங்கும் அல்லு அர்ஜுன்! | மீண்டும் ஜிம்மில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்ட திரிஷா! | 'வித் லவ்' படத்தின் வசூல் விவரம் குறித்து தகவல் இதோ! | தெலுங்கு படத்தை இயக்கும் 'மார்கோ' பட இயக்குனர்! | ஜி.வி. பிரகாஷூக்கு மாமாவாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த விஜய் ஆண்டனி! |

ஹிந்தி படங்களை அடுத்து தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர், மும்பையில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டுள்ளார் . அதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் அந்த வீடியோவை பார்த்து பலரும் சுதந்திர தினத்தன்று சொல்லக்கூடியதை கிருஷ்ண ஜெயந்தி அன்று சொல்வதா? என்று கருத்து வெளியிட்டு அவரை டிரோல் செய்தனர்.
அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்துள்ளார் ஜான்வி கபூர். அதில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட பலரும் பாரத் மாதா கி ஜெய் என்று கூறினார்கள். அதைக் கேட்டுதான் நானும் சொன்னேன். ஆனால் நான் சொன்னதை மட்டும் கட் பண்ணி வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள். அதோடு, பாரத் மாதா கி ஜெய் என்ற வாசகத்தை எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். அதில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.