டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் | துல்கர் சல்மான் படத்தில் இணைந்த ஸ்ருதிஹாசன் |
ஹிந்தி படங்களை அடுத்து தற்போது தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஜான்வி கபூர், மும்பையில் நடைபெற்ற கிருஷ்ண ஜெயந்தி விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். அப்போது அவர் பாரத் மாதா கி ஜெய் என்று கோஷமிட்டுள்ளார் . அதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் அந்த வீடியோவை பார்த்து பலரும் சுதந்திர தினத்தன்று சொல்லக்கூடியதை கிருஷ்ண ஜெயந்தி அன்று சொல்வதா? என்று கருத்து வெளியிட்டு அவரை டிரோல் செய்தனர்.
அது குறித்து ஒரு விளக்கம் கொடுத்துள்ளார் ஜான்வி கபூர். அதில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் கலந்து கொண்ட பலரும் பாரத் மாதா கி ஜெய் என்று கூறினார்கள். அதைக் கேட்டுதான் நானும் சொன்னேன். ஆனால் நான் சொன்னதை மட்டும் கட் பண்ணி வீடியோவை வைரல் ஆக்கி வருகிறார்கள். அதோடு, பாரத் மாதா கி ஜெய் என்ற வாசகத்தை எப்போது வேண்டுமானாலும் சொல்லலாம். அதில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.