இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
விஜயகாந்தின் 100வது படமான ‛கேப்டன் பிரபாகரன்' நாளை மறுநாள் சுமார் 500 தியேட்டர்களில் ரீ-ரிலீஸாகிறது. இப்படம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இப்பட இயக்குனர் ஆர்கே செல்வமணி, தமிழ் சினிமாவை தற்போது அழித்து வரும் நிகழ்வு பற்றி பேசினார்.
அவர் கூறுகையில், ‛‛ஒருவர் 100 கோடி சம்பளம் வாங்கிவிட்டால் உடனே எனக்கும் ரூ.100 கோடி சம்பளம் வேண்டும் என நினைக்கிறார்கள். ஒரு படம் 1000 கோடி வசூலித்துவிட்டால் உடனே என் படமும் 1000 கோடி வசூலிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். நல்ல படம் நிச்சயம் ஓடும். ரசிகர்களுக்கு அதுபோன்ற படங்களையே நாம் தர வேண்டும். என் படம் ஓட வேண்டும் என நினைக்கலாம், ஆனால் அதை தாண்டி ஓடி விடக்கூடாது என நினைப்பது சரியல்ல. இந்த நோய் தான் தமிழ் சினிமாவை அழிக்கிறது. ஒரு நல்ல படம் நிறைய வசூலிக்கலாம். அதேசமயம் அதிகம் வசூல் செய்த படம் நல்ல படமாகிவிடாது'' என்றார்.