பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு இயக்குனர் மற்றும் நடிகர் சசிகுமாரின் மைத்துனரும், சசிகுமார் தயாரிப்பு நிறுவனத்தின் மேலாளருமான அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டார். தற்கொலைக்கு காரணம் பைனான்சியர் அன்பு செழியனின் கந்துவட்டி கொடுமை தான் என்று அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார். அந்த கடிதத்தின் படியும், சசிகுமார் அளித்த புகாரின் பேரிலும் போலீசார் அன்பு செழியன் மீது வழக்கு தொடர்ந்தனர். கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அன்பு செழியன் தலைமறைவானார்.
இதற்கிடையில் தன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை தடை செய்ய வேண்டும் என அன்பு செழியன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் அன்பு செழியன் மீதான வழக்கிற்கு இடைக்கால தடை விதித்தது. இதனால் தலைமறைவான அன்பு செழியன் வெளியில் வந்தார். அமைச்சர் வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிலையில் அன்பு செழியன் மீதான வழக்கிற்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என்று சசிகுமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், அதன் மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு தள்ளி வைத்தது.