என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
'பருத்தி வீரன்' படத்தின் பஞ்சாயத்துதான் கடந்த ஒரு வார காலமாக ஊடகங்களை ஆக்கிரமித்திருந்தது. தான் கொடுத்த பேட்டி மூலம் சர்ச்சையை ஆரம்பித்து வைத்த தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல் ராஜா, இன்று காலை வெளியிட்ட 'வருத்த' அறிக்கைக்குப் பிறகு இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என எதிர்பார்த்தார்கள்.
ஆனால், அமீரின் நண்பரும், இயக்குனரும், நடிகருமான சசிகுமார், “போலியான வருத்தத்திற்கு உண்மையைப் பலி கொடுக்க முடியாது. அமீர் அண்ணன், ஞானவேல்ராஜா மீது சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்ன ?. 'நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் புண்படுததி இருந்தால்…' என்று குறிப்பிட்டு சொல்கிறார் ஞானவேல் ராஜா. அப்படியெனில் அந்த சில வார்த்தைகள் என்ன ?.
திட்டமிட்டு ஒருவரை அவமானப்படுத்திவிட்டு அவருக்கு அவரே வருந்துவது என்ன மாதிரியான வருத்தம் ?.
இதன் மூலம் அமீர் அண்ணனுக்கு ஞானவேல்ராஜா சொல்ல வருவது என்ன ?.
பெயரிப்படாத அந்தக் கடிதம் யாருக்கு ?,” என சசிகுமார் சில பல கேள்விகளை அறிக்கையாக வெளியிட்டுள்ளார்.
இந்த விவகாரம் இத்துடன் முற்றுப்புள்ளி வைக்கப்படலாம் என எதிர்பார்த்த நிலையில், இதற்கு 'கமா' போட்டு தொடர வைத்துள்ளார் சசிகுமார்.