புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
நடிகர் வடிவேலு மீது ஏற்கெனவே தயாரிப்பாளர் சங்கத்தில் தயாரிப்பாளர் ஷங்கர் புகார் கொடுத்துள்ளார். அவர் தயாரிக்கும் இம்சை அரசன் 23ம் புலிகேசியின் 2ம் பாகத்தில் நடிக்க ஒப்புக் கொண்ட வடிவேலுவை நம்பி கோடிக் கணக்கில் செலவு செய்து செட் போட்டார்கள். ஆனால் அவர் படப்பிடிப்புக்கு வராமல் டிமிக்கி கொடுத்து விட்டார். இதனால் தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் மீது விளக்கம் அளிக்குமாறு வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இந்த நிலையில் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கேவும் வடிவேலு மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்திருக்கிறார். எல்லாம் அவன் செயல், புலிவேசம், வைகை எக்ஸ்பிரஸ், அழகர் மலை உள்ளிட்ட பல படங்களை தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். எல்லாம் அவன் செயல், அழகர்மலை படங்களில் ஆர்கே, வடிவேலு காமினேஷன் காமெடி மிகவும் பிரபலம்.
தற்போது ஆர்கே, நீயும் நானும் நடுவுல பேயும் என்ற படத்தை தயாரித்து, நடிக்கிறார். இதில் வடிவேலு நடிக்க ஒப்பந்தம் செய்யய்பட்டு அவருக்கு 75 லட்சம் ரூபாய் சம்பளமும் பேசப்பட்டுள்ளதாக தெரிகிறது. படப்பிடிப்பு தொடங்கி விட்ட நிலையில் தற்போது வடிவேலு படப்பிடிப்பு வர மறுப்பதாக தெரிகிறது. இதனால் வடிவேலு மீது ஆர்கே, தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் கொடுத்துள்ளார்.
இதேபோன்று தில்லுக்கு துட்டு படத்தை இயக்கிய ராம்பாலா, அடுத்து ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் இயக்க இருக்கும் படத்தில் நடிப்பதாக ஒப்புக்கொண்டு பிறகு கதை மாற்றச் சொல்லி மறுத்திருக்கிறார் வடிவேலு. இந்த புகாரும் தயாரிப்பாளர் சங்கத்திற்கு சென்றுள்ளது. இதுகுறித்தும் வடிவேலுவிடம் விளக்கம் கேட்பது என்றும், விளக்கம் அளிக்காத பட்சத்தில் அவருக்கு ரெட் கார்டு போடுவது என்றும் தயரிப்பாளர் சங்கம் முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.