புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! | துருவ் விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட்டை வெளியிட்ட விக்ரம்! | கடற்கரையில் பிகினியில் நீராடும் கங்குவா நாயகி திஷா பதானி! | மீண்டும் இணைந்த விஜய் தேவரகொண்டா - தில் ராஜூ | தள்ளிப்போகும் இந்தியன் 2 ... அதே தேதியை குறிவைக்கும் ராயன்? | விஜய் 69வது படத்தை தயாரிக்கும் யஷ் பட தயாரிப்பாளர்? | ‛மஞ்சும்மல் பாய்ஸ்' படம் தந்த பாடம்: நடிகர் சித்தார்த் அருண்பாண்டியன் |
தீபாவளி வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் சிவகார்த்திகேயன். அப்போது அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்ட அவர், தீபாவளின்னாலே பட்டாசு தான் முதல்ல வரும். அதனால் உங்க பிள்ளைங்களை பாதுகாப்போடு பட்டாசு வெடிக்க சொல்லுங்க. குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துக்களை சொல்லுங்க என்றார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, நான் பத்திரிகைகளை சந்தித்து ஒரு வருடத்துக்கு மேலாகி விட்டது. ஆனால் இனிமேல் வருடத்திற்கு இரண்டு மூன்று தடவையாவது சந்திப்பேன். மேலும், ஒவ்வொரு வருடமும் இரண்டு படங்கள் கொடுக்க வேண்டும் என்று தான் நினைக்கிறேன்.
ஆனால், ஒவ்வொரு படமும் 100 முதல் 150 நாட்கள் வரை படப்பிடிப்பு நடக்கிறது. பெரிய கதைகளாக தேர்ந்தெடுத்து நடிப்பதால் அப்படி ஆகிறது. ஆனால் அடுத்த ஆண்டு முதல் வருடத்திற்கு இரண்டு படங்களை ரிலீஸ் செய்து விட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு படங்களை தேர்வு செய்வேன் என்றார் சிவகார்த்திகேயன்.