சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
தன் பிறந்த நாளான, நவ., 7 முதல், தீவிர அரசியலில் இறங்குகிறார், நடிகர் கமல். புது கட்சி துவக்கம் குறித்த அறிவிப்பையும், அவர் அன்று வெளியிட திட்டமிட்டு உள்ளார்.
தமிழக அரசின் அனைத்து துறைகளிலும், ஊழல் மலிந்துள்ளது; இந்த ஆட்சி தானாகவே கலையும் என, ஆளுங்கட்சியை, கமல் விமர்சித்தார். அவரது விமர்சனத்திற்கு, அமைச்சர்கள் கடும் எதிர்ப்பும், கண்டனமும் தெரிவித்தனர். தனியார், டிவியில், கமல் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில், அடிக்கடி ஆளுங்கட்சியின் அரசியலை கேலி,கிண்டல் செய்யும் கருத்துக்களை கூறி வருகிறார்.
தேர்தல் நேரத்தில், உங்கள் கோபத்தை காட்டுங்கள் என, டிவி வாயிலாக கமல், ஏற்கனவே மறைமுக பிரசாரத்தை துவக்கி விட்டார். எனவே, தீவிர அரசியலுக்கு, கமல் வருவது உறுதி என, அவரது ரசிகர்கள் கூறி வந்தனர்.
இந்நிலையில், கோவையில் நடந்த திருமண நிகழ்ச்சியில், கமல் பேசுகையில், அரசியல் சூழலை, இப்படியே விட்டு வைக்காமல், மாற்ற வேண்டியது, நம் கடமை. கோட்டையை நோக்கிப் புறப்படுவோம். நான், நேரடி அரசியலுக்கு வந்துவிட்டேன் என்றார்.
இது குறித்து, அவரது ரசிகர் மன்ற நிர்வாகிகள் கூறியதாவது: ரசிகர் மன்றத்தை, நற்பணி இயக்கமாக மாற்றி, இதுவரை, 40 கோடி ரூபாய்க்கு மேல், நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. ரத்த தானம், கண் தானம், உடல் உறுப்புகள் தானம் செய்வதுடன், பெண்களுக்கு இலவச தையல் பயிற்சி,கம்ப்யூட்டர் பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளன. நவ., 7ல், கமல் பிறந்த நாள். அன்றைய தினம், வழக்கம் போல் நலத்திட்ட உதவிகள் வழங்குவதுடன், அதன் அரசியல் பிரவேசத்தையும், கமல் அறிவிக்க உள்ளார். அனேகமாக, அன்றே தன் புது கட்சி அறிவிப்பை யும் வெளியிடுவார் என, எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.