அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
லிங்குசாமியின் திருப்பதி பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த படம் 'உத்தம வில்லன்'. கமல் நடித்த இந்த படம் பெரிய வரவேற்பை பெறாமல் பெரும் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் லிங்குசாமி பெரும் பொருளாதார இழப்பை சந்தித்தார் என்று கூறப்பட்டது. ஆனால் சமீப நாட்களாக சில சமூக வலைத்தளங்களில் 'உத்தம வில்லன்' படம் பெரிய லாபம் தந்த படம் போன்ற கருத்து வெளியிடப்பட்டது. இதனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளார் லிங்குசாமி. அதில் இந்த பட நஷ்டத்திற்கு கமல் ஒரு படம் பண்ணித் தருவதாக கூறியிருக்கிறார் என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இது தொடர்பாக நேர்காணல் ஒன்றில் லிங்குசாமி கூறியிருப்பதாவது: உத்தம வில்லன் படம் என்னை பெரிய பொருளாதார சிக்கலில் தள்ளியது உண்மைதான். இதனை நான் குறையாக சொல்லவில்லை. ஆனால் நிஜம் அதுதான். இந்த இழப்புகாக ஒரு படம் பண்ணித் தருவதாக கமல் சொன்னார். அதனை எழுதியும் கொடுத்தார். இதுகுறித்து அவரிடம் அடிக்கடி சென்று கேட்டேன். அவரும் பண்ணித் தருவாக சொல்கிறார்.
கமலிடம் நான்தான் விரும்பி சென்றேன். தேவர் மகன் மாதிரி, அபூர்வ சகோதரர்கள் மாதிரி ஒரு படத்தை எதிர்பார்த்து சென்றேன். அதற்கேற்ப ஒரு பக்கா கமர்ஷியல் கதைதான் சொன்னார். ஆனால் திடீரென உத்தம வில்லன் எனது படம் என்று கூறிவிட்டார். கமல் வாரத்திற்கு ஒரு படம் மாற்றிக் கொண்டிருப்பார். அது அவருடைய தேடல். அதில் சில படங்கள் வெற்றியும் பெற்றுள்ளன. நாங்கள் 'த்ரிஷ்யம்' படம் பண்ணித் தரச் சொல்லி கேட்டோம். படத்தையும் காட்டினோம். ஆனால் எங்களுக்கு செய்து தர மறுத்துவிட்டு இன்னொரு கம்பெனிக்கு அந்த படத்தை செய்து கொடுத்தார்.
உத்தம வில்லன் பார்த்து விட்டு நாங்கள் பல திருத்தங்களை சொன்னோம். அதை ஏற்றுக் கொண்ட அவர் அதை செய்யாமலேயே வெளியிட்டார். எங்கள் திருத்தத்தை செய்திருந்தால் படம் நன்றாக வந்திருக்கும்.
இவ்வாறு லிங்குசாமி கூறியுள்ளார்.