பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
தமிழ் சின்னத்திரை வரலாற்றில் ஒரு டி.வி நிகழ்ச்சி முக்கிய பிரச்னை போன்று விவாதிக்கப்படுவது இதுதான் முதல் முறை. அந்த அளவிற்கு பிக் பாஸ் நிகழ்ச்சியின் வேகம் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் கமல். அவர் நிகழ்ச்சியை நடத்திச் சென்ற விதம். இதுவரை நிகழ்ச்சியின் ஹைலைட்டாக இருந்த ஓவியாவுகம், ஜூலியும் வெளியேறிவிட்ட நிலையில் நிகழ்ச்சி டல் அடிக்க ஆரம்பித்து விட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது.
ஓவியாவின் தனித்துவமான குணாதிசயத்தை சீரியசாகவும், ஜூலியின் அழுவாச்சி காவியத்தை காமெடியாகவும் மக்கள் ரசித்து வந்தார்கள். இடையிடையே சினேகனின் கட்டிப்பிடி வைத்தியம், காயத்ரியின் அலட்டல் நாடகம், வையாபுரியின் புலம்பல் என நிகழ்ச்சி களை கட்டியது.
ஓவியா, ஜூலி இல்லா நிலையில் நிகழ்ச்சியை களைகட்ட வைக்க துணியை நீங்களே துவையுங்கள் என்றும், புதுவிதமாக விளையாட்டுகளை அறிமுகப்படுத்தியும் நிகழ்ச்சியை கலகலப்பாக்க முயற்சிக்கிறார் பிக் பாஸ். ஆனாலும் ரசிகர்களை ஈர்க்கவில்லை.
இந்நிலையில், இந்த வாரம் அதிரடியாக ஒரு பெரிய செலபிரிட்டியை பிக் பாஸ் வீட்டுக்குள் அனுப்பி நிகழ்ச்சியை மீண்டும் பரபரப்பாக்கும் திட்டத்தில் இருக்கிறார் பிக் பாஸ். அவர் யார் என்பது இப்போதைக்கு சஸ்பென்ஸ் என்கிறார்கள்.