பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
நடிகை பாவனா கடத்தப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட பல்சர் சுனில், சமீபத்தில் நடிகர் திலீப்பிற்கு பணம் கேட்டு ஒரு மிரட்டல் கடிதம் எழுதியிருந்தார். இதுதொடர்பாக திலீப், காவல்துறையில் புகார் அளித்திருந்தார். மேலும் எந்த விசாரணைக்கும் தயார் என்றும் கூறியிருந்தார் திலீப். அதன்படி நேற்று கொச்சியில் உள்ள ஆலுவா போலீஸ் கிளப்பில் வைத்து ஏடிஜிபி சந்தியா முன்னிலையில் திலீப் மற்றும் அவரது நண்பரான நாதிர்ஷா ஆகியோரிடம் விசாரணை நடைபெற்றது..
நேற்று மதியம் 12.30 மணிக்கு ஆரம்பித்த இந்த விசாரணை நள்ளிரவு தாண்டியும் அதாவது சுமார் 12 மணி நேரம் வரை நடைபெற்றது. விசாரணையில் போலீசாரின் அனைத்து கேள்விகளுக்கும் திலீப்பும், நாதிர்ஷாவும் பதிலளித்தனர். விசாரணை முடிந்து வெளியே வந்த திலீப், போலீசார் தன்னிடம் கேட்ட கேள்விகளின் அடிப்படையில் பார்க்கும்போது விசாரணை சரியான திசையில் சென்றுகொண்டிருப்பதாக கூறியுள்ளார். தேவைப்பட்டால் திலீப் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என போலீசார் கூறியுள்ளனர்.