'காந்தி டாக்ஸ்' முதல் 'வித் லவ்' வரை... இந்த வார ஓடிடி வெளியீடுகள்.. | வருங்கால கணவருக்கு என்னென்ன தகுதிகள் இருக்க வேண்டும்! மீனாட்சி சவுத்ரி வெளியிட்ட தகவல் | வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி: 'துரந்தர்- 2' படத்தின் டிரைலர் நாளை வெளியாகிறது | ஜான்வி கபூரின் பிறந்தநாளில் வெளியிடப்பட்ட பெத்தி பட போஸ்டர்! | யோகி பாபுவின் 'கெணத்த காணோம்' படத்தின் டிரைலர் வெளியானது! | ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' |

கடந்த 2017ல் பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி எட்டாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். சுமார் மூன்று மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளிவந்த திலீப் இப்போது வரை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த வழக்கின் விசாரணையானது இப்போது வரை சிறிய இடைவெளிகள் விட்டு விட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திலீப்புக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என விசாரணை குழு தரப்பிலிருந்து கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
திலீப்பிற்கு ஜாமின் வழங்கியபோது அவர் வெளியில் சென்று சாட்சிகளின் மனதை கலைப்பது, சாட்சியங்களை அழிப்பது, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக சிறப்பு புலனாய்வு குழுவிற்கு இடைஞ்சல்கள் கொடுப்பது உள்ளிட்ட எந்த விஷயங்களையும் செய்யக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பிய விதிமுறைகளை திலீப் மீறிவிட்டார்.. அதனால் அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அதில் காரணம் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட நிறைவுப் பகுதியை எட்டியுள்ள நிலையில், சிறப்பு விசாரணைக்குழு அதிகாரி குறுக்கு விசாரணை செய்ய வேண்டியது மட்டுமே பாக்கி இருக்கிறது. இந்த நிலையில் திலீப்பின் ஜாமினை ரத்து செய்வது வேறு சில சிக்கல்களுக்கு வழி வகுக்கலாம் என்று கூறி ஜாமினை ரத்து செய்ய மறுத்துவிட்டது.




