நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! | 20 கிலோ வெயிட் குறைத்த புகைப்படங்களை வெளியிட்ட நடிகை குஷ்பு! | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் நடிக்கும் ராம் சரண் |
தமிழகத்தில் மிகப்பெரிய அளவில் புகழ்பெற்ற நடிகர்கள் எல்லாம் அடுத்ததாக அரசியலை நோக்கி தான் குறிவைத்து நகர்ந்து வருகிறார்கள். ஆனால் கேரளாவை பொறுத்தவரை நடிகர்களும் சரி, அங்குள்ள ரசிகர்களும் சரி சினிமாவையும் அரசியலையும் தனித்தனியாக பிரித்து வைத்திருக்கிறார்கள். இருந்தாலும் சமீப வருடங்களாக சினிமா பிரபலங்கள் அரசியலுக்குள் நுழைவது அதிகரிக்க துவங்கியுள்ளது.
அந்த வகையில் கடந்த 35 வருடங்களுக்கு மேலாக மலையாள சினிமாவில் பிரபல நடிகராக மோகன்லால், மம்முட்டி ஆகியோருக்கு அடுத்த இடத்தில் இருந்து வரும் நடிகர் சுரேஷ்கோபி கடந்த 2016ல் அரசியலில் அடி எடுத்து வைத்து பா.ஜ., கட்சியில் இணைந்தார். அந்த வருடமே ராஜ்யசபா எம்பி ஆகவும் தேர்வு செய்யப்பட்டார். அதே சமயம் 2019 நடைபெற்ற பார்லிமென்ட் தேர்தலில் திருச்சூர் தொகுதியில் போட்டியிட்டு மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு தோல்வியை தழுவினார்.
தனது அரசியல் நுழைவுக்காக சினிமாவிலிருந்து கொஞ்ச காலம் விலகி இருந்த சுரேஷ்கோபி, மீண்டும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். அதேசமயம் அரசியல் கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசி வருகிறார். இந்த நிலையில் வர இருக்கும் பார்லிமென்ட் தேர்தலில் மீண்டும் திருச்சூர் தொகுதியில் அவர் போட்டியிட இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியாகி உள்ளது.