சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தை சேர்ந்த பா.ஜனதா மூத்த தலைவர் சதானந்தன் ராஜ்யசபா உறுப்பினர் ஆனார். அவருக்காக, கண்ணூரில் புதிதாக அமைக்கப்பட்ட எம்.பி. அலுவலக திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் மத்திய பெட்ரோலியம் மற்றும் சுற்றுலாத்துறை இணை அமைச்சரும், நடிகருமான சுரேஷ் கோபி கலந்துகொண்டு அலுவலகத்தை திறந்து வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது: சதானந்தன் மாஸ்டர் அலுவலகம் விரைவில் மத்திய அமைச்சர் அலுவலகமாக மாற வாழ்த்துகிறேன். என்னை மத்திய அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி விட்டு, எனக்கு பதிலாக சதானந்தன் மாஸ்டரை மத்திய அமைச்சராக நியமித்தால் மகிழ்ச்சி அடைவேன். இது கேரள அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயமாக மாறும்.
நடிகராக இருந்து அரசியல்வாதியாக மாறிய நான், லோக்சபா தேர்தலின் போது, மக்கள் அளித்த தீர்ப்பை அங்கீகரிக்கும் விதமாக என்னை கட்சி மேலிடம் மத்திய அமைச்சர் ஆக்கியிருக்கலாம். எனது திரைப்பட வாழ்க்கையை விட்டு விட்டு நான் ஒருபோதும் அமைச்சராக இருக்க விரும்பவில்லை. சமீபத்திய காலங்களில், எனது வருமானம் கணிசமாக குறைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.




