ஷாருக்கானை தொடர்ந்து சல்மான்கானுக்கு ஜோடியாகும் நயன்தாரா | ஹன்சிகா - சோஹைல் விவாகரத்து: 4 ஆண்டுகளில் முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை | லாபத்தில் பங்காக சம்பளம் : ராதிகா பெருமிதம் | விஜயும் யோசித்திருப்பார்.. திரிஷாவுக்கு வாழ்த்துகள்..: பார்த்திபன் 2வது வீடியோ | மேக்கப் போடுவதில் எனக்கு ஆர்வம் கிடையாது : சாரா அர்ஜுன் | நடிகை பாலியல் வழக்கு : கேரளா அரசு மேல்முறையீடுக்கு திலீப் உள்ளிட்ட நால்வருக்கு நோட்டீஸ் | நயன்தாரா, கவின் நடிக்கும் ஹாய் படத்தின் போஸ்டர் வெளியானது | என் அப்பா நினைவுக்கு வந்தார் : தாய் கிழவி வெற்றி விழாவில் கண் கலங்கிய சிவகார்த்திகேயன் | 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கியது! | ரிலீஸாகி எட்டு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும் சித்தாரே ஜமீன் பர் |

கடந்த 2017ல் பிரபல நடிகை ஒருவர் கடத்தப்பட்ட வழக்கில் மலையாள நடிகர் திலீப் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறி எட்டாவது குற்றவாளியாக கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டார். சுமார் மூன்று மாத சிறைவாசத்திற்கு பிறகு ஜாமினில் வெளிவந்த திலீப் இப்போது வரை தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்த வழக்கின் விசாரணையானது இப்போது வரை சிறிய இடைவெளிகள் விட்டு விட்டு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திலீப்புக்கு வழங்கப்பட்டுள்ள ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என விசாரணை குழு தரப்பிலிருந்து கேரள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
திலீப்பிற்கு ஜாமின் வழங்கியபோது அவர் வெளியில் சென்று சாட்சிகளின் மனதை கலைப்பது, சாட்சியங்களை அழிப்பது, உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மூலமாக சிறப்பு புலனாய்வு குழுவிற்கு இடைஞ்சல்கள் கொடுப்பது உள்ளிட்ட எந்த விஷயங்களையும் செய்யக்கூடாது என எச்சரிக்கை செய்து அனுப்பிய விதிமுறைகளை திலீப் மீறிவிட்டார்.. அதனால் அவரது ஜாமினை ரத்து செய்ய வேண்டும் என அதில் காரணம் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், இந்த வழக்கு விசாரணை கிட்டத்தட்ட நிறைவுப் பகுதியை எட்டியுள்ள நிலையில், சிறப்பு விசாரணைக்குழு அதிகாரி குறுக்கு விசாரணை செய்ய வேண்டியது மட்டுமே பாக்கி இருக்கிறது. இந்த நிலையில் திலீப்பின் ஜாமினை ரத்து செய்வது வேறு சில சிக்கல்களுக்கு வழி வகுக்கலாம் என்று கூறி ஜாமினை ரத்து செய்ய மறுத்துவிட்டது.




