புடவைகள் மீது பிரியம் கொண்ட திரிஷா- ஆடை வடிவமைப்பாளர் ஹர் ஷேன் | ஏ.ஆர்.ரஹ்மான் நேரலை நிகழ்ச்சியின் பாரம்பரிய பூஜை விழா நடைபெற்றது! | 'எல்லோ எல்லோ டர்ட்டி பெல்லோ' படத்தின் பர்ஸ்ட் லுக்: விஷ்ணு விஷால் வெளியீடு | சூர்யா படங்களின் வசூலில் முதலிடம் பிடித்த 'கருப்பு' | எளிமையாக விமானத்தில் சென்றாலும் விமர்சனமா? | 'திரிஷ்யம் 3' முன்பதிவில் மட்டும் 20 கோடி வசூல் | 83வது வயதில் 1540வது படம்: இதெல்லாம் இளையராஜாவால் மட்டுமே முடியும் | பெண்கள் பாதுகாப்பு கதையை எடுத்த பெண் தயாரிப்பாளர்கள் | இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்ட 'கருப்பு': பின்னணி என்ன? | ஆடம்பர செலவு குறைத்தல் : சொன்னதைச் செய்த கமல்ஹாசன் |

கடந்த 2024 பிப்ரவரியில் மலையாளத்தில் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' திரைப்படம் வெளியானது. இந்த படம் குறைந்த பட்ஜெட்டில், பெரிய அளவில் பிரபலம் இல்லாத நடிகர்களை வைத்து எடுக்கப்பட்டு 250 கோடி வரை வசூலித்து சாதனை படைத்தது. இந்த படத்தை இயக்குனர் சிதம்பரம் பொதுவால் என்பவர் இயக்கியிருந்தார். இவரை ரஜினி, கமல் உள்ளிட்ட பிரபலங்கள் நேரில் அழைத்து பாராட்டி இருந்தார்கள்.
இந்த நிலையில் தற்போது நடிகை ஒருவர் தன்னுடைய பிளாட்டில் இயக்குனர் சிதம்பரம் அத்துமீறி நுழைந்து தன்னிடம் தகாத முறையில் நடக்க முயன்றார் என்று எர்ணாகுளம் டவுன் போலீசில் புகார் அளித்திருந்தார். இதனை தொடர்ந்து பதியப்பட்ட வழக்கில் தன்னை கைது செய்யாமல் இருக்க முன் ஜாமினுக்கு விண்ணப்பித்தார் இயக்குனர் சிதம்பரம்.
அந்த மனுவில், “எனக்கும் சம்பந்தப்பட்ட நடிகைகள் நடைபெற்ற உரையாடல்கள் பட தயாரிப்பு சம்பந்தமான தொழில்நுட்ப ரீதியான உரையாடல்கள் தான்.. என்னுடைய பெயருக்கும் புகழுக்கும் களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற உள்நோக்கத்தில் இந்த புகார் அளிக்கப்பட்டுள்ளது. சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிற நாளில் இருந்து நான்கு வருடங்கள் கழித்து இந்த புகார் காவல் நிலையத்தில் அளி]க்கப்பட்டுள்ளது. அதனால் எனக்கு முன்ஜாமின் வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்திருந்தார் இயக்குனர் சிதம்பரம். இந்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் தற்போது சிதம்பரத்திற்கு முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டது.




