பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
'பாகுபலி' படத்தின் முதல் பாகத்தில் ஏமாற்றம் தந்தாலும், இரண்டாவது பாகத்தில் சண்டைக்காட்சி, வசனங்கள் என தனது 'தேவசேனா' கேரக்டரில் மலையளவு பிரமாண்டம் காட்டி ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துவிட்டார் அனுஷ்கா. இனி மூன்றாம் பாகம் உருவாகுமா என இப்போதே சொல்ல முடியாது தான்.. ஆனாலும் இந்தப்படத்திற்கு கதை எழுதிய விஜயேந்திர பிரசாத் மட்டும் இந்த 'தேவசேனா' என்கிற பெயரை உயிர்ப்பாக வைத்திருக்கவே விரும்பினார்.
அதற்காக, தான் இந்தியில் தொலைக்காட்சி ஒன்றிற்காக எழுதி வரும் 'ஆரம்ப்' என்கிற புராண நாடகத்தில் இடம்பெறும் கதாநாயகிக்கு தேவசேனா என பெயர் சூட்டிவிட்டார். திராவிட பாரம்பரியத்தில் வந்த வீர மங்கை இளவரசியாக இந்த தேவசேனா கதாபாத்திரத்தை உருவாக்கியுள்ளாராம் விஜயேந்திர பிரசாத். இந்த புராண கதையில் தேவசேனா கதாபாத்திரத்தில் நாயகியாக நடிக்கிறார் கார்த்திகா.. ஆம்.. கோ, புறம்போக்கு படங்களில் நடித்து தற்போது படவாய்ப்பில்லாமல் வீட்டில் இருக்கும் அதே கார்த்திகா தான்.