நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
தமிழ்த் திரையுலகில் 80களில் கொடி கட்டிப் பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ராதா. 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமாகி பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிகளைக் கொடுத்துள்ளார். திருமணத்திற்குப் பின் நடிப்பதை விட்டுவிட்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார்.
அவருக்கு கார்த்திகா, துளசி என இரு மகள்களும், விக்னேஷ் என்ற ஒரு மகனும் இருக்கிறார். கார்த்திகா 2011ல் வெளிவந்த 'கோ' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் 'அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை' படத்திலும் நடித்தார். முதல் படம் பெரிய வெற்றியைப் பெற்ற பின்னும் அடுத்த படங்கள் ஓடாததால் அவரால் இங்கு ஜொலிக்க முடியவில்லை. மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் இரண்டாவது மகள் துளசி அறிமுகமானார். அவரும் அதன்பின் 'யான்' என்ற படத்தில் நடித்ததோடு சரி.
கார்த்திகா அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு இளைஞருடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கையில் அணிந்திருக்கும் மோதிரம்தான் 'போகஸ்' செய்யப்பட்டுள்ளது. அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது குறித்து பதிவிட்டுள்ளார் எனத் தெரிகிறது. விரைவில் அவருடைய திருமண அறிவிப்பு வரலாம்.