'வீர தீர சூரன்' முதல் கட்டப் படப்பிடிப்பு நிறைவு | காதலித்த நடிகை விபத்தில் இறக்க : தற்கொலை செய்து கொண்ட நடிகர் | 'செப்' ஆனார் ஏஆர் ரஹ்மான் மகள் ரஹீமா | சிம்பு மீது புகார் : அண்ணன், தம்பி பிரச்னை என்கிறார் ஐசரி கணேஷ் | 'இந்தியன் 2' - புரமோஷன் இன்று ஆரம்பம் | ஜுனியர் என்டிஆருக்காக விட்டுக் கொடுத்த கரண் ஜோஹர் | படம் தாமதமானதால் கண்ணீர் விட்ட கதாநாயகி | சூதாட்ட படத்தில் விஜய்சேதுபதி | விடுதலை 2ம் பாகத்தில் எஸ்.ஜே.சூர்யா? | வெற்றிமாறன் தயாரிப்பில் கவின், ஆண்ட்ரியா |
தமிழ்த் திரையுலகில் 80களில் கொடி கட்டிப் பறந்த முன்னணி நடிகைகளில் ஒருவர் ராதா. 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் அறிமுகமாகி பல முன்னணி கதாநாயகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பல வெற்றிகளைக் கொடுத்துள்ளார். திருமணத்திற்குப் பின் நடிப்பதை விட்டுவிட்டு மும்பையில் செட்டிலாகிவிட்டார்.
அவருக்கு கார்த்திகா, துளசி என இரு மகள்களும், விக்னேஷ் என்ற ஒரு மகனும் இருக்கிறார். கார்த்திகா 2011ல் வெளிவந்த 'கோ' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின் 'அன்னக்கொடி, புறம்போக்கு என்கிற பொதுவுடமை' படத்திலும் நடித்தார். முதல் படம் பெரிய வெற்றியைப் பெற்ற பின்னும் அடுத்த படங்கள் ஓடாததால் அவரால் இங்கு ஜொலிக்க முடியவில்லை. மணிரத்னம் இயக்கிய 'கடல்' படத்தில் இரண்டாவது மகள் துளசி அறிமுகமானார். அவரும் அதன்பின் 'யான்' என்ற படத்தில் நடித்ததோடு சரி.
கார்த்திகா அவருடைய இன்ஸ்டாகிராம் தளத்தில் ஒரு இளைஞருடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படத்தில் கையில் அணிந்திருக்கும் மோதிரம்தான் 'போகஸ்' செய்யப்பட்டுள்ளது. அவருக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது குறித்து பதிவிட்டுள்ளார் எனத் தெரிகிறது. விரைவில் அவருடைய திருமண அறிவிப்பு வரலாம்.