7ஜி ரெயின்போ காலனி 2 அப்டேட் சொன்ன செல்வராகவன் | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' படத்தின் சென்சார் மற்றும் ரன்னிங் டைம் வெளியானது! | விருது மாற்றி கிடைத்ததில் கொஞ்சம் வருத்தம் தான் : மஞ்சும்மல் பாய்ஸ் இசையமைப்பாளர் | நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த மாதுரி தீக்ஷித் : கோபத்தில் வெளியேறிய ரசிகர்கள் | கேரள அரசு குழந்தை நட்சத்திர விருதுகள் மிஸ்ஸிங் : கிளம்பியது சர்ச்சை | ஆர்யன் பட கிளைமாக்ஸ் மாற்றம் : ஹீரோ விஷ்ணு விஷால் அறிவிப்பு | சாய் அபயங்கரை வாழ்த்திய அல்லு அர்ஜுன்! | வேகம் எடுக்கும் விஜய்யின் 'ஜனநாயகன்' படக்குழு! இம்மாதம் முதல் பாடல் வெளியாகிறது! | அஜித் 64வது படத்தில் நடிக்க விஜய்சேதுபதி, லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை! | டிரெயின் பட ரிலீசில் அதிரடி முடிவு எடுத்த தாணு |

அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் புஷ்பா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. முதல் பாகம் 'புஷ்பா - தி ரைஸ்' என்ற பெயரில் வெளியான நிலையில், இரண்டாவது பாகம், ‛புஷ்பா-2 ; தி ரூல்ஸ்' என்கிற பெயரிலும் வெளியாக இருக்கிறது.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 2வது பாகத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் 3வது பாகம் பற்றிய 'அப்டேட்' தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு பாகங்களுடன் புஷ்பா படம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3வது பாகமும் வர இருப்பது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
சென்னையில் சமீபத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா பேசுகையில், ''புஷ்பா படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எதையோ மிஸ் பண்ணும் உணர்வு எனக்குள் வந்தது. என் வாழ்க்கை புஷ்பா படத்திற்கு சமம். பாகம் 1, பாகம் 2 மற்றும் பாகம் 3'' என பேசியிருந்தார்.
இந்த நிலையில், படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் முடிந்ததை குறிக்கும் வகையிலான ஒரு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி உள்ளிட்டோர் நிற்க, பின்புற திரையில் 'புஷ்பா-3: தி ராம்பேஜ்' என்ற புகைப்படம் தெரிகிறது. இதனை வைத்து பார்க்கையில் 'புஷ்பா 3' படம் நிச்சயம் வரும் என்பது தெளிவாகிறது. 2வது பாகம் வெளியாவதற்கு முன்பே வெளியான இந்த 3வது பாகம் பற்றிய மறைமுக அப்டேட், 'புஷ்பா 2' மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.