நடிகைகள் என்ன பொம்மைகளா? - நித்யா மேனன் கோபம் | பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான ஒளிப்பதிவாளர் குறித்து தயாரிப்பாளர் கரண் ஜோகர் விளக்கம் | கண்ணப்பா ஹார்ட் டிஸ்க் களவு போனதன் பின்னணியில் சகோதரர் : விஷ்ணு மஞ்சு குற்றச்சாட்டு | விக்ரமை இயக்கும் அடங்கமறு இயக்குனர் | மதராஸி படப்பிடிப்பு நிறைவடைந்தது | சமந்தாவின் சுபம் படம் ஜுன் 13ல் ஓடிடியில் வெளியாகிறது | நானியிடம் மன்னிப்பு கேட்ட எஸ்.ஜே.சூர்யா | ஓடிடி தளங்களில் இந்த வாரம் கடும் போட்டி | ரசிகர்கள் ஆதரவு எப்போதும் வேண்டும் : நெகிழும் சிம்ரன் | சிரஞ்சீவியை சந்தித்து வாழ்த்து பெற்ற 'குபேரா' இயக்குனர் சேகர் கம்முலா |
அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் ஏற்கனவே மூன்று வருடங்களுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் புஷ்பா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாக இருக்கிறது. முதல் பாகம் 'புஷ்பா - தி ரைஸ்' என்ற பெயரில் வெளியான நிலையில், இரண்டாவது பாகம், ‛புஷ்பா-2 ; தி ரூல்ஸ்' என்கிற பெயரிலும் வெளியாக இருக்கிறது.
முதல் பாகத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து 2வது பாகத்திற்கு ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில், இந்த படத்தின் 3வது பாகம் பற்றிய 'அப்டேட்' தற்போது வெளியாகியுள்ளது. இரண்டு பாகங்களுடன் புஷ்பா படம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 3வது பாகமும் வர இருப்பது தற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
சென்னையில் சமீபத்தில் நடந்த புரமோஷன் நிகழ்ச்சியில் நடிகை ராஷ்மிகா பேசுகையில், ''புஷ்பா படத்தின் படப்பிடிப்பை முடித்த பிறகு எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எதையோ மிஸ் பண்ணும் உணர்வு எனக்குள் வந்தது. என் வாழ்க்கை புஷ்பா படத்திற்கு சமம். பாகம் 1, பாகம் 2 மற்றும் பாகம் 3'' என பேசியிருந்தார்.
இந்த நிலையில், படத்தின் இசைக்கோர்ப்பு பணிகள் முடிந்ததை குறிக்கும் வகையிலான ஒரு புகைப்படத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் சவுண்ட் இன்ஜினியர் ரசூல் பூக்குட்டி உள்ளிட்டோர் நிற்க, பின்புற திரையில் 'புஷ்பா-3: தி ராம்பேஜ்' என்ற புகைப்படம் தெரிகிறது. இதனை வைத்து பார்க்கையில் 'புஷ்பா 3' படம் நிச்சயம் வரும் என்பது தெளிவாகிறது. 2வது பாகம் வெளியாவதற்கு முன்பே வெளியான இந்த 3வது பாகம் பற்றிய மறைமுக அப்டேட், 'புஷ்பா 2' மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.