தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
ராஜமவுலி இயக்கிய ‛பாகுபலி' படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்து உலக அளவில் பிரபலமானவர் பிரபாஸ். அதன்பிறகு தொடர்ந்து பான் இந்தியா படங்களில் நடித்து வரும் பிரபாஸ், பாகுபலி படத்தில் நடித்து வந்தபோது அவரும், அனுஷ்காவும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் பரபரப்பு செய்திகள் வெளியாகின. ஆனால் அதையடுத்து அவர்கள் இரண்டு பேருமே நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என்று சொல்லி அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
அதன் பிறகும் பிரபாஸுக்கு அவரது பெற்றோர் பெண் பார்த்து வருவதாகவும், விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் அவ்வப்போது செய்திகள் வெளியாகி வந்தன. என்றாலும் அவரது திருமணம் நடந்தபாடில்லை. இந்த நிலையில் தற்போது பிரபாஸின் உறவினர் சியாமளா தேவி என்பவர் அளித்த ஒரு பேட்டியில், ‛‛தற்போது பிரபாசுக்கு 45 வயதாகி விட்டதால் அவருக்கு திருமணம் செய்ய வேண்டுமென்று அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். கூடிய சீக்கிரமே சிவனின் அருளால் பிரபாஸுக்கு திருமணம் நடைபெறும்'' என்று தெரிவித்திருக்கிறார். இந்த செய்தி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.