பக்தி பட இயக்குனர் 'ஓம்சக்தி' ஜெகதீசன் காலமானார் | லாக்டவுனில் அனுபமா பரமேஸ்வரன் | ஹிந்தி படங்களை இந்திய படமாக பார்க்க வேண்டும் : அனல் அரசு சொல்கிறார் | உண்மையான பலம் உங்களை நிரூபிக்க அல்ல - சமந்தா | ரஜினியை 'தல' ஆக மாற்றிய அமிதாப் பச்சன் | முன் ஜாமீன் பெற்ற மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் | என் மனைவி பற்றி அவதூறாக விமர்சிக்க வேண்டாம் ; மனோஜ் கே.ஜெயன் வேண்டுகோள் | ‛வேட்டையன்' வழக்கமான ரஜினி படம் அல்ல - ராணா | ரீ -ரிலீஸ் ஆகும் வில்லு திரைப்படம் | குபேரா படத்திற்காக குப்பை மேட்டில் தனுஷ் |
இன்றைய முன்னணி நாயகிகளில் யாருக்கும் கிடைக்காத ஒரு பெயர் காஜல் அகர்வாலுக்குக் கிடைத்திருக்கிறது. அதனால் அவரும் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார். 'கைதி நம்பர் 150' படத்தில் சிரஞ்சீவியுடன் ஜோடியாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்ட போது சிலருக்கு சந்தேகம் இருந்தது. சிரஞ்சீவியின் மகன் ராம்சரணுடன் 'மகதீரா' படத்தில் நடித்தவர், அப்பாவுடன் நடித்தால் பொருத்தமாக இருக்குமா என சிலர் கேள்வி எழுப்பினார்கள். தெலுங்குத் திரையுலகில் 'மகதீரா' படம் ஒரு மறக்க முடியாத படம். காஜல் அகர்வால் நடிப்புக்காகவும் பேசப்பட்ட படம். அந்தப் படம் மக்கள் மனதில் இன்னும் இருக்கும் போது, மகனுடன் ஜோடி சேர்ந்தவுடன் அப்பாவுடன் ஜோடி சேர்ந்தால் எப்படி என சந்தேகித்தார்கள்.
ஆனால், அந்த சந்தேகங்கள் அனைத்தும் தவிடு பொடியாகிவிட்டது. 'கைதி நம்பர் 150' படத்தில் சிரஞ்சீவிக்கும் பொருத்தமான ஜோடியாகவே காஜல் அகர்வால் திரையுலகில் தெரிந்தார். அதோடு, அவருடைய கதாபாத்திரத்தில் சிறப்பாகவும் நடித்துள்ளார் என இப்போது அனைவரும் பாராட்டி வருகிறார்கள். அப்பா, மகனுடன் ஜோடி சேர்ந்து நடித்த இரண்டு படங்களுமே தெலுங்குத் திரையுலகின் சூப்பர் ஹிட் படங்கள் என்பதில் காஜல் அகர்வால் ரொம்பவே மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.காஜல் அகர்வால்தான் சிரஞ்சீவியின் ஜோடியாக நடிக்க வேண்டும் என்று முடிவு செய்தவரே சிரஞ்சீவியின் மகன் ராம் சரண்தான் என்பது கூடுதல் தகவல்.