மீண்டும் த்ரில்லர் படத்தில் ஜி.வி.பிரகாஷ் | கடலை சுத்தம் செய்ய கிளம்பிய ரெஜினா | யுனிசெப் தூதராக கரீனா கபூர் நியமனம் | பிளாஷ்பேக்: 'கண்ணீர் திலகம்' ஸ்ரீரஞ்சனி | டைட்டானிக் கேப்டன் காலமானார் | ஐஸ்வர்யா லட்சுமி தோழிதான், காதலி இல்லை : அர்ஜூன் தாஸ் விளக்கம் | புதிய கதைகளை தேடி செல்லும் சிம்பு! | பிரதீப் ரங்கநாதன், அஸ்வத் கூட்டணியில் உருவாகும் டிராகன் படம்! | மீண்டும் ஹிந்துவாக மாறிய இசையமைப்பாளர் ஜிப்ரான்! | 'மணிசித்திரதாழு' படத்தை 50 முறை பார்த்தேன்- போஸ்டருடன் செல்வராகவன் வெளியிட்ட பதிவு! |
நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் நாடகங்கள் என்றால் சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு மிகவும் பிடிக்கும். திடீரென்று கிளம்பிச் சென்று பார்த்துவிட்டு வருவார். தற்போது ஒய்.ஜி.மகேந்திரன் காசேதான் கடவுளடா என்ற நாடகத்தை நடத்தி வருகிறார். சித்ராலயா கோபு இயக்கத்தில் 1972ம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தின் நாடக வடிவம் இது.
தற்போது சென்னையில் இந்த நாடகம் வெற்றிகரகமாக நடந்து வருகிறது. நேற்று வாணி மகாலில் மாலை 6 மணிக்கு நடந்த நாடகத்தை பார்க்க திடீரென்று ரஜினி வந்தார். தன்னுடன் தனது பேரக்குழந்தைகளையும் (தனுஷ் மகன்கள்) அழைத்து வந்தார். ரசிகர்களோடு அமர்ந்து ஜாலியாக சிரித்து, ரசித்து நாடகத்தை பார்த்தார். பின்னர் நாடகம் முடிந்ததும், நாடக கலைஞர்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அழைத்து கைகுலுக்கி பாராட்டினார். பின்னர் அனைவருடனும் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டார். பின்னர் அங்கிருந்து அனைவரிடமும் விடைபெற்றுச் சென்றார். ரஜினியுடன் நடிகர் கார்த்திக், நடிகை கோவை சரளா ஆகியோரும் அமர்ந்து நாடகம் பார்த்தனர்.