'லியோ'வில் என்னை வீணாக்கினார் லோகேஷ் : சஞ்சய் தத் கமெண்ட் | 68 வயதில் 3 நடிகைகளுடன் டான்ஸ் : கெட்ட ஆட்டம் போட்ட மொட்ட ராஜேந்திரன் | ஆடி வெள்ளி ரீமேக்கில் நயன்தாராவுக்கு பதில் திரிஷா | இளையராஜா வீட்டு மருமகள் ஆகி இருக்கணும்... : புது குண்டு போட்ட வனிதா, நடந்தது என்ன? | அனுபவசாலிகள் இல்லாத கட்சி வெற்றி பெறாது : சொல்கிறார் நடிகர் ரஜினி | ஷங்கரின் கனவுப்படம் 'வேள்பாரி' : தயாரிக்கப் போவது யார் ? | 'மோனிகா' பூஜாவை விட ரசிகர்களைக் கவர்ந்த சவுபின் ஷாகிர் | பிளாஷ்பேக் : அருக்காணியால் தயங்கிய பாக்யராஜ் | பிளாஷ்பேக் : அதிக சம்பளம் பெற்ற கதாசிரியர் | குரு பூர்ணிமாவில் அமிதாப் பச்சன் சிலையை வைத்து வழிபாடு |
தமிழில் அறிமுகமாகி தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் ரெஜினா கசாண்ட்ரா. தற்போது தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த 'பார்சி' தொடரில் ரேகாவாகவும், 'ராக்கெட் பாய்ஸ்' தொடரில் மிர்னாலினி சாராபாய் பாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது விடாமுயற்சி, பிளாஷ்பேக், பார்டர் படங்களில் நடித்து வருகிறார்.
ரெஜினா திரைத்துறை மட்டுமின்றி சமூக பணிகளிலும் தொடர்ந்து ஆர்வம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் கடற்கரையையும், கடலையும் சுத்தம் செய்யும் பணியில் ரெஜினா ஈடுபட திட்டமிட்டிருக்கிறார். இதற்காக அவர் எஸ்யூபி மெரினா கிளப் குழுவினருடன் இணைந்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும்போது “ எனக்கு கடலும், கடற்கரையும் பிடித்தமான இடங்கள். அவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று எப்போதும் நினைப்பேன். அதை செயல்படுத்தும் விதமாக மெரினா கிளப் குழுவினரோடு இணைந்து கொண்டேன். கடற்கரை மற்றும் நீர்நிலைகளை குப்பை கிடங்காக மாற்றிவிட கூடாது என்பதில் எனக்கு அதிக நம்பிக்கை உள்ளது. சுற்றுச்சூழலில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் இதர கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும். நீர் நிலைகள் நமக்கு அத்தியாவசியமானவை, அதை கலங்கடிக்க வேண்டாம். இந்த பணி மிகவும் தேவையான ஒன்று என நினைத்தேன். இந்த குழுவினரோடு இணைந்தது மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.