சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளராக இருப்பவர் விஷால். நடிகர் சங்கத்தின் பொதுக்குழு, கடந்த மாதம் 27ம் தேதி பலத்த சர்ச்சைகளுக்கிடையே நடிகர் சங்க வளாகத்திலேயே நடந்து முடிந்தது. அப்போது ஏற்பட்ட சிறு சிறு கைகலப்புகள், கார் கண்ணாடி உடைப்புகள் விவகாரத்தை இன்னும் சிக்கலாக்கின. அதன் பின் நடிகர் சங்கம் தொடர்பான எந்த ஒரு நிகழ்வும் பெரிய அளவில் நடக்கவில்லை. கொஞ்சம் அமைதியாகவே இருந்து வந்தது.
இந்நிலையில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு நேற்று அஞ்சலி செலுத்த நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷால் தனியாகவே வந்தார். நடிகர் சங்கத் தலைவர் நாசர், பொருளாளர் கார்த்தி ஆகியோருடன் அவர் சேர்ந்து வரவில்லை. சோவிற்கு அஞ்சலி செலுத்திய போதும் கூட விஷால் தனியாகவே வந்தார், நடிகர் சங்க நிர்வாகிகள் தனியாக வந்தனர். நடிகர் சங்கம் சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் முக்கிய நிகழ்வுகளில் பங்கெடுக்கச் சென்றால் கூட்டாகவே செல்வார்கள். ஆனால், கடந்த இரண்டு நாட்களாக விஷால் தனியாக வந்திருப்பது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. குறிப்பாக நடிகர் சங்கத்திற்கும், விஷாலுக்கும் பிரச்னை போன்ற தகவல் பரவி வருகிறது. ஆனால் இதை விஷால் தரப்பு மறுத்துள்ளது.
இதுப்பற்றி விஷால் தரப்பு கூறியிருப்பதாவது... ‛‛கடந்த சில நாட்களாகவே விஷாலுக்கு கடுமையான காய்ச்சலாம், இதன்காரணமாக அவர் மருந்து மாத்திரைகள் எடுத்து கொள்வதால் நன்றாக ஓய்வு எடுத்து வருகிறாராம். அதனால் தான், நடிகர் சங்கம் நிர்வாககிள் உடன் அவர் செல்லாமல் தனியாக சென்று அஞ்சலி செலுத்தியதாகவும், மற்றபடி எந்த பிரச்னையும் இல்லை என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.