ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் | ரகசியத்தை சொன்ன சார்லி : மிரண்டு போன பன் பட்டர் ஜாம் படக்குழு | விஷ்ணு விஷால் மகளுக்கு அமீர்கான் பெயர் வைத்தது ஏன்? | சாய்பல்லவி, ஐஸ்வர்ய லட்சுமி, அதிதி வரிசையில் ஹீரோயின் ஆன டாக்டர் | மரபணு மாற்றப்பட்ட மனிதனின் கதை : ‛கைமேரா' அர்த்தம் இதுதான் | சூர்யாவுடன் நடிப்பது வாழ்நாள் கனவு: மீனாட்சி தினேஷ் | 'இந்தியன் 2, தக் லைப்' தோல்விகள் : 'இந்தியன் 3' எதிர்காலம் என்ன ? | பிளாஷ்பேக்: ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ராஜேஷ் | பிளாஷ்பேக்: 40 வயது மூத்தவருக்கு ஜோடி: இதிலும் சாதனை படைத்த ஸ்ரீதேவி | 25 ஆண்டுகளுக்கு பிறகு மகனுடன் இணைந்து நடிக்கும் ஜெயராம் |
மலையாள திரையுலகில் இதுநாள்வரை வெளியான படங்களில் அதிகப்படியான வசூலை ஈட்டிய முதல் மூன்று படங்களுமே மோகன்லாலின் படங்களாக அமைந்துவிட்ட சாதனையைப்பற்றி ஏற்கனவே சொல்லியிருக்கிறோம்.. முதல் இடத்தை பிடித்திருந்த 'த்ரிஷ்யம்' படத்தை, அதற்குப்பின் வெளியான மோகன்லாலின் 'ஒப்பம்' படம் மெதுவாக நெருங்கி வர, கடந்த மாதம் வெளியான மோகன்லாலின் இன்னொரு படமான புலி முருகனோ, ஹைஸ்பீடில் ஓவர்டேக் செய்து முதல் இடத்தை தக்கவைத்துக்கொண்டு விட்டது.. அந்தவகையில் த்ரிஷ்யம் படம் வேறு வழியின்றி இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டது..
அடுத்து இன்னொரு இடியாக இப்போது அந்த சாதனையையும் 'ஒப்பம்' படம், தட்டிப்பறித்துகொண்டுள்ளது. உலகெங்கிலும் சேர்த்த மொத்த வசூலை கணக்கிடும்போது இப்போது 'ஒப்பம்' படமும் த்ரிஷ்யம்' படத்தை ஓவர்டேக் செய்துவிட்டது.. இதற்கு முன்னதாக த்ரிஷ்யம் படம் கேரளாவில் மட்டும் சுமார் 42.5 கோடி ரூபாய் வசூலித்திருந்தது. 'ஒப்பம்' படமோ இப்போது 78 நாட்களில் கேரளாவில் மட்டும் 42.7 வசூலித்து இரண்டாம் இடத்தை பிடித்து விட்டது. இன்னும் 20 தியேட்டர்களில் ஓடிக்கொண்டும் இருக்கிறது 'ஒப்பம்'..