உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் |

முதல் இரு பாகங்களின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு தற்போது 'த்ரிஷ்யம்', மூன்றாம் பாகம் தயாராகி உள்ளது. முதல் இரு பாகத்தை இயக்கிய ஜீத்து ஜோசப் இயக்கி உள்ளார். மோகன்லால், மீனா அன்சிபா ஹாசன், எஸ்தர் அனில், ஆஷா சரத், சித்திக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனில் ஜான்சன் இசையமைத்துள்ளார். சதீஷ் குரூப் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது. இந்த நிலையில் படத்தின் உலகளாவிய திரையரங்கு மற்றும் டிஜிட்டல் உரிமைகளை பனோரமா ஸ்டுடியோஸ் மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து பெற்றுள்ளது. படம் பெரிய தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆனால் தொகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
இதுகுறித்து மோகன்லால் கூறும்போது “என் எண்ணங்களிலும், பார்வையாளர்களின் உணர்ச்சிகளிலும், வரிகளுக்கு இடையிலான அமைதியிலும் ஜார்ஜ்குட்டி கடந்த நான்கு வருடங்களாக என்னுடன் பயணிக்கிறார். அந்த கதாபாத்திரத்தில் மீண்டும் நடிப்பது புதிய ரகசியங்களுடன் என் பழைய நண்பரை சந்திப்பது போல உணர்கிறேன். இந்தமுறை அவரது பயணம் எங்கு செல்கிறது என்பதைப் பார்வையாளர்கள் பார்ப்பதற்காக நான் ஆவலாக உள்ளேன்” என்றார்.