சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
பார்த்திபன் தயாரித்து, இயக்கி வரும் படம் கோடிட்ட இடங்களை நிரப்புக. சாந்தனு, பூஜா குமார், சிம்ரன் நடிக்கும் இந்தப் படம் க்ரவுட் பண்டிங் முறையில் தயாரிக்கப்படுகிறது. அதாவது பல பேர் சேர்ந்து ஆளுக்கு கொஞ்சம் பணம்போட்டு தயாரிக்கிற படம். இதன் படப்பிடிப்புகள் நடந்து வருகிறது. ஆனால் பார்த்திபன் எதிர்பார்த்த அளவிற்கு தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை, ஒரு சிலர் மட்டும் முன்வந்திருக்கும் நிலையில் தன் சொந்த பணத்திலிருந்து படத்தை தயாரித்து வருகிறார் பார்த்திபன். தீபாவளியை யட்டி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதுகுறித்து வேதனையுடன் குறிப்பிட்டிருக்கிறார். அந்த அறிக்கை வருமாறு:
கனவுக் குகைக்குள்ளிருந்து கண் முழுதுமாய் திறக்காமலே.... திரைமுன்னோட்டம் காண்கிறேன்- களிப்போடு! என் பங்களிப்போடு விரைவில் வரப்போகும் நான்கு படங்களை. சுசீந்திரனின் சீரிய இயக்கத்தில்,(உண்மையான/நேர்மையான)அரசியல் இயக்கத்தை நடத்தும் ஒரு சிறந்த தலைவனின் பாத்திரத்தில் மாவீரன் கிட்டு படத்தில் நடிக்கிறேன். திட்டம் போட்டு திருடுற கூட்டம். புதிய தயாரிப்பாளர் ரகு தன் தம்பி கயல் சந்திரனை திரைவானில் முழு நிலவாக்க திட்டம் போட்டு தயாரிக்கிற படம். அறிமுக இயக்குனர் சுதர்சன் புதுமையான கதை களத்தில் 51 பவுன் நகை சுவையோடு திரை உலக கோப்பையை கைப்பற்ற திட்டம் போட்டு இயக்குகிற படம். அந்த மைதானத்தில எனக்குன்னு மட்டை இருக்கு . வர்ற பந்தையெல்லாம் அடிச்சி ஆடியிருக்கேன் எத்தனை சதம்னு ரலீஸுக்கு பிறகு ஸ்கோர் போர்டை பாத்தாதான் தெரியும்.
தேனான்டாள் மூவிஸ் முரளி தயாரிக்க உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் பொதுவாக என் மனசு தங்கம் மார்க்கெட்டில் என்றும் விலை போகும் தங்கமாக ஒரு கதை சொல்லி இயக்குனராக அறிமுகமாகிறார் தளபதி. நான் வரும் காட்சிகளில் எனக்கென ஒரு அஞ்சறைப்பெட்டியை இயக்குனர் திறந்து வைக்க அதிலிருந்து மிளகு சீரகம் பட்டை லவங்கம் எடுத்து மசாலா சமைத்துள்ளேன். ரசிகர்கள் சுவைக்கும் போதுதான் ருசி புரியும்.
இவ்வருட இறுதியில் (டிசம்பர் 23) வெளியிட முடிவெடுத்திருக்கும் படம் கோடிட்ட இடங்களை நிரப்புக! படாடோப படத்தயாரிப்புகளில் மார்தட்டும் மார்க்கெட்டில் உள்ள கலைஞர்களின் முக வசீகரத்தை மூலதனமாக வைத்து மக்களின் எல்லையில்லா எதிர்பார்ப்புகளோடு வெளியாகி வெற்றியாகும் - வெற்றுவாகும் படங்களுக்கு நடுவே கோடிட்ட இடங்களை நிரப்புக!
கூட்டுத் தயாரிப்பு எனத் துவங்கினேன் ஆனால் விரல் விட்டு எண்ணிக்கூடியவர்களைத் தவிர, நட்பு வட்டம் அனைவரும் அன்பை மட்டுமே அள்ளி வழங்கியதால் (இன்னமும் பங்குகள் விற்பனைக்கு உள்ளன) கிட்டத்தட்ட என் சொந்த பணத்தில் தயாரிக்கும் படம். சினிமா மீது எனக்கிருக்கும் காதலை கொண்டாடுவது மட்டுமே என் வாழ்க்கை என்று ஆன பின், என் எல்லாம் இட்டு நிரம்பியுள்ள படம்.
இவ்வாறு பார்த்திபன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.