பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
திருச்சி தியேட்டரில், கபாலி பட விளம்பர ராட்சத பலுான் வெடித்ததில் காயமடைந்தவர்களுக்கு, இழப்பீடு வழங்கக் கோரி, தயாரிப்பாளர் தாணு, நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட, ஐந்து பேருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த, கபாலி திரைப்படம், சில மாதங்களுக்கு முன், திருச்சி ரம்பா தியேட்டரில் ரிலீஸ் செய்யப்பட்டது. இதற்காக, ராட்சத விளம்பர பலுான், தியேட்டர் அருகே பறக்க விடப்பட்டது. மூன்று நாட்கள் கழித்து, பலுானை அவிழ்த்தபோது, அது எதிர்பாராத விதமாக வெடித்தது. இதில், நால்வர் காயமடைந்தனர்; அனைவரும் தனியார் மருத்துவமனையில், சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்நிலையில், காயமடைந்தவர்களின் சிகிச்சை செலவை, வாடகைக்கு பலுான் அமைத்தவரே, ஏற்க வேண்டும் என போலீசார் மற்றும் தியேட்டர் நிர்வாகத்தினர் வற்புறுத்தியுள்ளனர். இதையடுத்து வாடகைக்கு பலுான் அமைத்தவர், தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, நடிகர் ரஜினிகாந்த், ரம்பா தியேட்டர் உரிமையாளர், மேலாளர் மற்றும் மாவட்ட ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் கர்ணன் ஆகியோருக்கு, நஷ்டஈடு கேட்டு, வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அதில், கூறியிருப்பதாவது: பலுான் வெடித்ததற்கு, ரசிகர்களின் ஆர்வக் கோளாறே காரணம். ஆகையால், படத்தால், லாபமடையும் தயாரிப்பாளர், நடிகர் உள்ளிட்டவர்கள் தான், இழப்பீடு வழங்க வேண்டும். அந்த வகையில், காயம் அடைந்தவர்களுக்கு இழப்பீடு, 10 நாட்களுக்குள் வழங்கப்பட வேண்டும். இல்லாவிட்டால், ஐந்து பேர் மீதும், நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு நோட்டீசில் கூறப்பட்டுள்ளது.