பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனின் நெருங்கிய நண்பர், சிவகார்த்திகேயனின் கல்லூரி தோழர் அருண்ராஜா காமராஜ். 'பீட்சா'வில் இடம்பெற்ற “ராத்திரியை ஆளும் அரசன்...” பாடல் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானார். அதன் பிறகு 'டார்லிங்', 'ஜிகர்தண்டா' படங்களின் மூலம் பாடலாசிரியர் ஆனார். சிவகார்த்திகேயன் சிபாரிசால் ராஜா ராணி, மான் கராத்தே, படங்களில் நடித்தார்.
தற்போது 'கபாலி' படத்தில் “நெருப்புடா நெருங்குடா...” என்ற பாடலை ரஜினிக்காக எழுதி, பாடியும் இருக்கிறார். டீசரில் இந்த பாடல் இடம்பெற இப்போது அருண்ராஜாவுக்கு வாய்ப்புகள் குவிகிறது. பாடலாசிரியர், பாடகர், நடிகர் என மூன்ற பாதைகளில் பயணிக்கும் அருண்ராஜாவின் அடுத்த குறிக்கோள் படம் இயக்குவது. இதற்காக பல படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி பயிற்சியும் எடுத்திருக்கிறார்.