விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து | ‛குட் பேட் அக்லி' : இளமை தோற்றத்திற்கு திரும்பும் அஜித் | தீபாவளிக்கு வெளியாகும் கவின் படம் |
ஏராளமான புத்தகங்களை எழுதியிருப்பவர் பிரபல எழுத்தாளார் பாலகுமாரன். அதோடு கே.பாக்யராஜ் நடித்த இது நம்ம ஆளு படத்தை இயக்கிய இவர், நாயகன், குணா, ஜென்டில்மேன், காதலன், பாட்ஷா, ஜீன்ஸ் உள்பட பல படங்களுக்கு டயலாக் எழுதியுள்ளார். ஆனபோதும் சமீபகாலமாக அவர் சினிமா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை. மேலும், அஜீத்தை வைத்து விஷ்ணுவர்தன் இயக்கும் படத்திற்கு பாலகுமாரன்தான் கதை வசனம் எழுதுவதாக ஒரு செய்தி வெளியாகிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், நேற்று நடிகர் ரஜினிகாந்தை பாலகுமாரன் தனது மனைவியுடன் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். அப்போது தான் எழுதிய சில புத்தகங்களை அவருக்கு பரிசாக கொடுத்துள்ளார். அவர்களின் இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரம் நடந்ததாம். இந்த தகவலை தனது பேஸ்புக்கில் புகைப்படத்துடன் தெரிவித்துள்ளார் பாலகுமாரன்.