சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
பாலா தயாரிப்பில் மிஷ்கின் இயக்கிய 'பிசாசு' படம் மூலம் இளம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அரோல் கொரேலி. அவர் அடுத்து இசையமைத்து வெளிவந்த படம் 'பசங்க 2'. சூர்யா தயாரித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. படத்தை இயக்கிய பாண்டிராஜுக்கு சில நாட்களுக்கு முன் கார் ஒன்றைப் பரிசளித்தார். தற்போது படத்தின் இசையமைப்பாளர் அரோல் கொரேலிக்கு தங்கச் சங்கிலி ஒன்றைப் பரிசளித்துள்ளார்.
அது பற்றி அரோல் கொரேலி கூறியதாவது, “சில நாட்களுக்கு முன் சூர்யா சாரிடமிருந்து அழைப்பு வந்தது. அவரைப் பார்க்கச் சென்ற போது என்னை மிகவும் பாராட்டி, தங்கச் சங்கிலி ஒன்றை அணிவித்தார். 'பசங்க 2' படத்திற்கு அருமையாக இசையமைத்துள்ளீர்கள். தொடர்ந்து நாம் இணைந்து பணியாற்றுவோம் என்று சொன்னார். இந்தப் புத்தாண்டு சிறந்த பரிசுடன் ஆரம்பமாகியுள்ளது. என்னை அறிமுகப்படுத்திய இயக்குனர் மிஷ்கின் அவர்களும் 'பசங்க 2' படத்தில் என் இசையைப் பற்றிப் பாராட்டினார்.
தற்போது 'சவரக் கத்தி' படத்திற்கு இசையமைத்து வருகிறேன். தொடர்ந்து முன்னணி இயக்குனர்களுடனும், புது இயக்குனர்களுடனும் இந்தப் புத்தாண்டில் பயணிக்க ஆசைப்படுகிறேன்,” என மகிழ்ச்சியுடன் தெரிவிக்கிறார் அரோல் கொரேலி.